Рет қаралды 15,659
Rs.80 crore welfare schemes
காயல்பட்டினத்திற்கு சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான அரசு பணித்திட்டங்களின் துவக்கவிழா 13.07.2023 வியாழன் அன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், உயர்திரு டாக்டர் செந்தில் ராஜ் IAS, தி.மு.க. துணை பொதுசெயலாளர் திருமிகு கனிமொழி MP, மீன்வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா R.ராதா கிருஷணன், காயல்பட்டினம் நகராட்சி தவைர், ஆணையர் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில், ரூ.62 50 கோடி மதிப்பில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை விரிவாக்கம், பேட்டரியில் இயங்கும்13 துப்புரவு வாகனங்கள், மற்றும் பள்ளிக்கூட விரிவாக்கம், 2500 தெரு விளக்குகள், 113 சாலைகள் என ஏராளமான திட்டப்பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. மேலும் சிறப்பான சேவையை செய்துவரும் நகர்மன்ற தலைவர் முத்து முஹம்மது அவர்களுக்கு பாராட்டும் வழங்கப்பட்டன. அந்த நிகழாவுகளை இந்த காணொளி மூலம் காணலாம்.
- காயல் விஷன்.