" படிக்காத மேதை" படத்தில் "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடல் விமர்சனம் #nallavanEnakkuNaaneNallava #alangudyvellaichamy #vilari #kannadhasan_songs #msv_tkr
Пікірлер: 19
@sankarasubramanianjanakira74933 ай бұрын
இந்தப்பாடலைப்பற்றிப் பேசினால் நிறைய பேச வேண்டும். கண்ணதாசன் பல்லவியிலேயே கதையின் கருவை தொட்டு, தொடர்ந்து சரணங்களில் விளையாடியிருப்பார். விஸ்வநாதன் ராமமூர்த்தி - இசையின் உச்சம். Grand orchestration. Tape rhythm from beginning to fast pace in the last. Mesmerizing. Strings, flute, shehenay, guitar strumming (opening nallavan என்று நிறுத்தி அங்கே guitar strumming பின் tape ஆரம்ப rhythm) என்று சொல்லிக்கொண்டே போகலாம். பாட்டில் melody ஐ மையமாக்கி அதைச்சுற்றி அலப்பறை இசை - இருவருக்கும் நிகர் இருவரே. அழுத்தமான டி எம் எஸ் மெழுகான பி பி எஸ் குரல்கள் பாடிய நெளிவுகள். அடுத்து சிவாஜி - மாபெரும் தமிழ் நாட்டின் கலைச்செல்வம். ஒவ்வொரு அசைவிலும் character பிரதிபலிக்கும். கண்களில் கோபம் மற்றும் கேலி ஒரே பார்வையில் காட்டும் நடிப்பின் உச்சம். தாளக்கட்டை புரிந்து நடை மற்றும் கை வாசிப்பு. அதுவும் கடைசியில் உதட்டில் கண்களில் சிறிய கோப வெறிகாட்டியபடி tape வாசிக்கும் நேர்த்தி - நடிப்பு மறந்து போய் நாம் லயிக்கும் இடம். நடனக்கலைஞர்கள் மற்றும் நடன ஆசிரியர் - ஆஹா அதி அற்பத கோர்வையான அசைவுகள். பாடலை படமாக்கிய விதம்- இயக்குனர் மற்றும் cinematographer. எத்தனை முறை என்று நினைவில்லை அத்தனை முறை பார்த்தும் கேட்டும் ரசித்த, இன்னும் ரசிக்கும் பாடல். இப்பாடலைப்ற்றிய நுணுக்கங்களை பலமுறை நண்பர்களிடமும், சுற்றத்திலும் சிலாகித்து பேசியதுண்டு. மேலும் நான் கல்லூரி படிக்கையில் தான் இப்படம் பார்த்தேன் 1977. சிறுவயதில் - புரியாத வயதில் பார்த்தபின். Sociology வகுப்பில் என் Asst Professor இப்படத்தில் வரும் characters பற்றி socio psycho analysis செய்தது மறக்க முடியாத அனுபவம். யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று அவர் கேட்ட போது நான் மட்டுமே எழுந்து நின்றேன். நினைவலைகள் 64 வயதில். நன்றி. தீவிர விஸ்வநாதன் ராமமூர்த்தி ரசிகன். இந்தப்பாடல் இரட்டையர்களின் மைல்கல்.
@SudiRaj-195233 ай бұрын
உங்கள் கல்லூரி வயதில் பார்த்து குழம்பிநீர்கள்!! பள்ளி பருவத்தில் சிவாஜி படம் என வேகமாய் போய் பார்த்த என் நிலைய என்ன சொல்ல!! படம் பாத்துட்டுவந்து என் நிலவரம் புரியாமல் என் சகோதரன் என்னிடம் கோர்ட்டில் தீர்ப்பு சொல்லிவிட்டு சாவித்திரி நேராக car drive panni அவுங்க வீட்டுக்கு போயிட்டாங்க அதோடு அன்னிக்கு ஷூட்டிங் முடிந்தது என்றெல்லாம் அள க்க எனக்கோ சிவாஜிக்கு ஜெயில் தண்டனை வங்கிதராமவிட்டதே போ துமுனுபொறுப்பில்லாமல்சிவாஜியை விட்டுட்டு பொராங்களேனு வருத்தம். ம்.ம்ம் நமைத்தெரியாதவர்களுக்காக வருத்தப்பட வைத்தார்கள்!! அந்தபுண்ணியவாங்கள்🎉🎉🎉🎉🎉
@sankarasubramanianjanakira74933 ай бұрын
@@SudiRaj-19523 😊
@ThavamaniChellamuthu3 ай бұрын
அனுபவ ஞானி அல்லவா கவிஞர் கண்ணதாசன்.இதில் நடித்திருக்கும் அத்தனை பேரும் நடிப்பு ஜாம்பவான்கள்.நல்லவன் ரொம்ப நல்லவன் விளக்கம் அருமை.👌👍🙏
@seenivasan71673 ай бұрын
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் அது தான் நம் நடிகர் திலகம்
@kumarramayya15623 ай бұрын
தாங்கள் மெல்லிசை மன்னர் அவர்களை பற்றி பேசினாலே மனம் துள்ளுகின்றது
@NayaruThingal3 ай бұрын
இதுல சிவாஜி சிரிப்பு ரொம்ப ஸ்பெசல். எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@mohanankunhikannan37313 ай бұрын
கவியரசரின் உன்னத வரிகளை கொண்ட குதூகலமான பாடல். இத்திரைப்படத்தில் அனைவரும் சகாப்தங்கள்.
@periyasamy-lk8rx3 ай бұрын
இன்று புதுக்கோட்டை ஆலங்குடியில் பலத்த மழை பெய்ய போகிறது.ஏனென்றால் ஆலங்குடியார் நீண்ட இடைவெளிக்கு பழைய பாடலைப் பற்றி விமர்சனம் செய்வதால்.
@SudiRaj-195233 ай бұрын
ஆமாம்!! அவருக்காகவே விடியோ போட்டு கொண்டிருக்கிரார் !! எதைபொட்டாலும் பாத்துட்டு ஒரு கம்மென்ட்ட போடுற நானே எரிச்சல காட்டிக்கல!! உங்கள எவ்வளவு சோதித்து இருப்பார் 😢
@katpadivaradarajanarulalan98043 ай бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா.உங்களிடம் இருந்து கற்க பல விஷயங்கள்
@SudiRaj-195233 ай бұрын
1st.view
@be_happy_3413 ай бұрын
அருமை❤❤❤❤❤
@senthilvlr3 ай бұрын
அதனால் தான் அவர் கவியரசர் !!
@SudiRaj-195233 ай бұрын
கல்யானபரிசு பாத்துட்டு ஜெமினி ய தனியா விட்டுட்டாங்களேனு கனத்த இதயத்தோடு வீட்டுக்கு வந்து வீட்டுல அப்பாவா பாத்ததும்தான் சரியாச்சு!! இந்தப்படம் சிவாஜிபாலாஜிரெண்டுபேருமேபுடிக்கும்.! யாரைகுற்றம் சொல்ல!? அதே வருத்தம் குழப்பமாக சென்றது நாட்கள்!! தலைய பிச்சிக்கிடேன்😢.
@ShankarRamamurthy-ju5ih3 ай бұрын
நல்ல விளக்கம்! சத்தான கதை, கருத்துள்ள பாடல் வரிகள், முத்தான இசை, காலத்தால் அழிக்க இயலாது என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு!!!
@valarmathiraja-k4m3 ай бұрын
அருமையான பதிவு😊
@gopinathamirthan71603 ай бұрын
Super review ❤
@ganeshramamurthy3 ай бұрын
இது தான்யா, சகாப்தங்களின் சங்கமம். அந்த கால படங்களில் நடிப்பு, இசை,பாடல் வரிகள், கதை அம்ஸம்,படபிடிப்பு,அர்த்தமுள்ள காரணம், போட்டி அனைத்தும் இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது... படத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார்கள்! ஆனால் இந்த காலத்தில்??????????????