Рет қаралды 368
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா (4)
காசியின் அருகே நர்தரா நகரில் ஈசனே நீயும் வந்துதித்தாயே
காரிருள் களையும் கதிரவனாக கலியுகம் காக்க கருணை கொண்டாயே
தென்திசை அமர்ந்த தக்ஷின குரு வாய் தென்னகம் வந்து அருள் புரிந்தாயே
அடிமுடி அறியா அருணையில் அமர்ந்து அன்பர்கள் அகத்தை அலங்கரித்தாயே
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா (2)
வாடிடும் உள்ளம் மகிழ்வுறும் வண்ணம் நாடிடும் அமைதியை தந்தவன் நீயே
நடந்ததும் நடப்பதும் நடக்க இருப்பதும் தந்தையின் ஆசி என்றுரைத்தாயே
நடப்பது அனைத்தும் நன்மையே என்ற
தெளிவினை உள்ளத்தில் மலர செய்தாயே
துன்புறும் வாழ்வு இன்புறும் வண்ணம் வாழும் வழியினை அருள் புரிந்தாயே
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா (2)
சகலமும் இங்கு தந்தையின் இருப்பு அதுவே இந்த படைப்பின் சிறப்பு
தந்தையே விண்ணும், தந்தையே மண்ணும், தந்தையே மனிதனும், தந்தையே மிருகமும்
தந்தையே எங்கும், தந்தையே எதிலும்
தந்தையை தவிர வேறொன்றுமில்லையே
ஆதலினாலே நீயும், நானும் என்றும் ஒன்றென்று களித்திருப்பேனே
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா (2)
கலியுக நஞ்சை நயமாய் முறிக்கும் பரம ஔஷதம் உன் திருநாமம்
யோகி ராம்சுரத்குமார் உன் திருநாமம், அதுவே எங்கள் தாரக மந்திரம்
உன் திருநாமம் எங்களை காத்து
பிறவி பெருங்கடல் கடக்கவும் செய்தது
நலமும் நல்கியே, வாழ்வும் சிறந்தே, வையகம் வியக்க முக்தியும் அளித்தது.
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா (4)