Рет қаралды 335,583
புளித்தமோர் கரைசல்
தேவையான பொருட்கள்
ஏழு நாட்கள் புளித்த மோர் - 5 லிட்டர்
தேவையான உபகரணங்கள்
10 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் - 1 (அல்லது)
10 லிட்டர் மண்பானை - 1
தயாரிப்பு முறை:
2 லிட்டர் தயிரில் 3 லிட்டர் தண்ணீர் கலந்து மோர் தயார் செய்து கொண்டு, பிளாஸ்டிக் டிரம்மில் அல்லது பானையில் நிழலான இடத்தில் மூடிவைத்து பயன்படுத்தவும்.
கவனிக்க வேண்டியவை
வெண்ணெய் எடுத்த மோரையே பயன்படுத்த வேண்டும். மழை நீர் படாதவாறு நிழலில் வைக்கவேண்டும். நாய், பெருச்சாளி சேதப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி புளித்த மோர் கரைசலை கலந்து பயன்படுத்தலாம்.
பயன்கள்:
மோர்க்கரைகலில் ஜிப்ராலிக் அமிலம் என்னும் வளர்ச்சி ஊக்கி உள்ளது. பயிர்கள் பூப்பிடிக்கும் முன்பும், பூப்பிடித்த பின்பும் தெளிப்பதினால் பிஞ்சு உதிர்வதை தவிர்த்து வளர்ச்சியை மேம்படுத்தலாம். நெல் பயிர் பால் பிடிக்கும் சமயத்தில் தெளிக்கலாம். வைரஸ் மற்றும் பூஞ்ஜை நோய்களை நன்றாகக் கட்டுப்படுத்தும்.
பயன்படுத்தும் காலம்:
மோர் கரைசல் தயாரான 7 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம், தினமும் ஒருமுறை கலக்கி விடவேண்டும்.
குறிப்பு:
வீடுகளில் மீதமாகும் மோரை வீணாக்காமல் தோட்டத்தில் ஒரு பானையில் ஊற்றி சேமித்துவைக்க வேண்டும். மோர் எவ்வளவு புளித்தாலும் பாதகமில்லை, எவ்வளவு புளிக்கிறதோ அவ்வளவு நல்லது.