Рет қаралды 1,158
திருச்சிற்றம்பலம்
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 79
ஊர் - திருஅஞ்சைக்களம்
தற்போது - திருவாஞ்சிகுளம்
வரிசை - மலை நாடு
மூலவர் - அஞ்சைகளத்தப்பர்
அம்பாள் - உமையம்மை
பாடியவர் - திருஞானசம்பந்தர் -0
திருநாவுக்கரசர் -0
சுந்தரர் -1
தேவாரம் - "தலைக்கு தலைமாலை"
விருக்ஷம் - சரக்கொன்றை
தீர்த்தம் - சிவகங்கை
நடைதிரப்பு - காலை - 6-11
மாலை -4 - 8
மாவட்டம் - திருச்சூர் (Kerala)
சிறப்பு :
276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் 260க்கும் மேற்பட்ட ஸ்தலங்கள் தமிழகத்தில் இருந்தாலும் பிற மாநிலமான கேரளாவில் ஒரே ஒரு தேவார பாடல் பெற்ற ஸ்தலமே உள்ளது அது இது மட்டுமே. இருந்தும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் முக்திக்கு முன்பு தரிசித்து கடைசியாக தேவாரம் இயற்றிய ஸ்தலமும் இதுவே.
சிவமயம்
தசாவதாரத்தில் ஒரு பெருமாளான பரசுராமர் தன் அன்னையை கொன்ற பழி தீர வழிபட்ட ஸ்தலம் இது. அஞ்சை என்பதற்கு அன்னை என்று பொருள் இதன் பொருட்டே இந்த ஸ்தலத்திற்கு திரு அஞ்சை களம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அரபிக் கடலோரம் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமத்தில் உள்ளது இந்த ஸ்தலம். கோயில் அஸ்திவாரம் தமிழக பாணியில் இருந்தாலும் மேற்கூரைகள் கொச்சின் மன்னர்களால் கட்டப்பட்டதால் கேரள பாணியில் உள்ளது. இங்கு பல பூஜைகள் தமிழக ஆகமத்தின் படியே நடைபெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களை தேடி ரசிப்பவர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் இந்த ஸ்தலம். நிச்சயம் வாழ்வில் ஒரு முறையேனும் பயணம் செய்து இங்குள்ள இறைவனை தரிசனம் செய்து பாருங்கள்.
திருச்சிற்றம்பலம்...........
maps.app.goo.gl/BNgf3oWHoSTcz...
hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Ganesh mani
Contact us
WhatsApp - 8056179430
mail- ganeshrm80@gmail.com