Рет қаралды 60,153
Tholil Sirakka Manthiram(Viyabaram Peruga Manthiram)
தொழிலில் வெற்றி பெற மந்திரம் - தொழில் வெற்றி பெற பரிகாரம் - தொழில் முன்னேற்றம் அடைய பரிகாரம் - சொந்த தொழில் சிறக்க பரிகாரம் - வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் - வியாபாரம் பெருக மந்திரம்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
அடுத்து நாம் சென்ற பதிவில் சொன்ன அபிராமி அந்தாதி பாடல் எண் 15, பாடல் எண் 52, மற்றும் பாடல் எண் 69 ஆகிய பாடல்களை முதலில் பாராயணம் செய்ய வேண்டும் பின்னர் நான்காவதாக இப்போ நாம் சொல்ல போகும் 74ம் பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.
1. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற - அபிராமி அந்தாதி 15 வது பாடல்
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
Thannalikku endrumunne palakodi thavangal seyvaar
man alikkum selvamo peruvaar? madhi vaanavar tham
vin alikkum selvamum azhiyaa muththi veedum andro?
pan alikkum sol parimala yaamalaip paingiliye.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
இன்பமான பாடல்களைத்தரும் சொற்களின் பிறப்பிடமாகிய எங்கள் அபிராமித்தாயே. நறுமணம் வீசும் தன்மை கொண்டவளே. ஈசனின் தோழியான பசுங்கிளியே...மலைமகளே. உனது குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்களைச் செய்யும் தவமுனிகள், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? அறிவுடைய அமரர்கள் வாழும் விண்ணுலகம் தன்னில் வாழக்கூடிய செல்வத்தையும், என்றும் அழியாத முக்தியையும், வீடுபேற்றையும் அல்லவா பெறுவார்.
2. பெருஞ்செல்வம் அடைய - அபிராமி அந்தாதி 52 வது பாடல்
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
Vaiyam, thuragam, madhagari, maamagudam, sivigai
peyyum kanagam, peruvilai aaram, pirai mudiththa
aiyan thirumanaiyaal adith thaamaraikku anbu munbu
seyyum thavam udaiyaarkku ulavaagiya sinnangale.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
பிறை நிலவைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமானின் திருமனையாளான அன்னை அபிராமியின் திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்து அவளை எண்ணித் தவம் உடையார்க்கு வையகம், குதிரை, ஆனை, மாமகுடம், பல்லக்கு, கொட்டும் பொன், விலையுயர்ந்த முத்து மாலைகள் கிடைக்கும். அன்னையை எண்ணித் துதிப்போர்க்கு இம்மையில் கிட்டும் செல்வங்களை இப்பாடல்
பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் இடம்பெற்றவையெல்லாம் பெற்றிருப்போர் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள். நாமும் இப்பாடலைப் அன்னையை வேண்டி தினமும் துதித்து பெருஞ்செல்வமடைவோம்.
3. சகல சௌபாக்கியங்களும் அடைய - அபிராமி அந்தாதி 69 வது பாடல்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
Thanam tharum, kalvi tharum, oru naalum thalarvu ariyaa
manam tharum, theiva vadivum tharum, nenjil vanjam illaa
inam tharum, nallana ellaam tharum, anbar enbavarkke
kanam tharum poong kuzhalaal abiraami kadaikkangale.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
இப்பாடலில் அபிராமி பட்டர் அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை பற்றி கூறுகிறார். எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லாச் சுற்றம், நல்லன எல்லாம் கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள் சிறிதளவு தன் திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து விடும். அன்னையிடத்து அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே நற்பெருமையானது கிட்டும்.
4. தொழிலில் மேன்மை அடைய - அபிராமி அந்தாதி 74 வது பாடல்
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
Nayanangal moonrudai naadhanum vedhamum naarananum
ayanum paravum abiraamavalli adiinaiyap
payanendru kondavar paavaiyar aadavum paadavum pon
sayanam porundhu thamaniyak kaavinil thanguvare.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
மூன்று கண்களையுடைய சிவபெருமானும், வேதங்களும், திருமாலும், பிரம்மனும் போற்றி வணங்கும் அபிராமி அன்னையின் திருவடிகளையே தங்கள் பயன் என்று கொண்டவர்கள், தேவமகளிர் ஆடிப்பாட, பொற்கட்டிலுடைய பொற்காட்டில் தங்கி மகிழும் பயனை விரும்புவரோ? அதாவது, உலகம் போற்றும் நால்வகை வேதங்களும் அவள் திருவடிகளே சரணமென்று பாடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைப் புரியும் மும்மூர்த்திகளும் அவள் திருவடிகளையே போற்றிப் பாடுகின்றனர். மனமே...நாமும் அவள் திருவடிகளையே பற்றிக்கொண்டு, அவளே அபயம் என்பதை உணர்ந்து அவளை சரணடைந்தால் அன்னை நம்மை காப்பாள், நம்மை தன் அன்பர்க் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கி பேரின்ப வாழ்வுதனை நமக்களிப்பாள்.
தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, பாடல் எண் 15, 52, 69 மற்றும் 74, இந்த 4 கரிய சித்தி பாடல்கள் ஒவ்வொன்றையும் 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் செய்யும் தொழிலில் வெற்றி பெற்று, நல்ல லாபம், நல்ல பெயர் மற்றும் புகழ் பெற்று வாழலாம்.
#aalayamselveer #abiramianthathi #tholilsirakka