Рет қаралды 281
சங்கரன்கோவில் பக்தர்கள் பொதுமக்களின்றி சம்பிரதாயத்திற்க்காக நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் ஸ்ரீ சங்கர நாராயணன் திருக்கோயிலில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலாயங்களில் ஒன்று இங்கு வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இத்திருவிழா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நிலவில் உள்ளதால் இம்முறை வழக்கம் போல் நடத்த இயலாத காரணத்தால் ஆடித்தபசு திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்திரவின் பேரில் ஆடித்தபசு திருவிழா பக்தர்கள் மக்களின்றி உள்திருவிழாவாக நடைபெற்றது ஆடித்தவசை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து சம்பிர தாயத்திற்க்காக அம்மனுக்கு முன்பு சங்கர நாரயனர் காட்சி கொடுத்தல் நடைெrற்றது இதில் கோவில் நிர்வாகத்தினர் காவல் துறையினர் மட்டும் பங்கேற்றனர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது வருடந்தோறும் நடைபெறும் சிறப்பாக நடைபெறும் ஆடித்தபசு திருவிழா இம்முறை சம்பிரதாய திருவிழாவாக நடைபெற்றது பக்தர்களை வேதனையடைய செய்தது