பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய் நான் வந்ததும் தொலைவாகினாய் பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய் கை நீட்டினேன் கனவாகினாய் ஆண் : மழை சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன் உடைந்தோடினாய் பெண் : என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே யே யே யே ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை கண்ணீரிலே ஆராதனை ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை பெண் : நான் தேடினேன் என் கண்ணனை புயல் சூழ்ந்ததே என் கண்களை ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை என் வேர் என்றும் அழிவதில்லை உன் வானம் முடிவதில்லை உறவே ஹே ஹே ஹே பெண் : { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா