Рет қаралды 103,596
வேல்மாறல் என்று இணைய வெளியில் கிடைத்த தொகுப்புகளில் இருந்த ஒரு முக்கியமான,அடிக்கோடிட்டு உணரவேண்டிய வார்த்தை - வினைகள் தீர்க்கும் வேல்மாறல் என்ற பதமே. நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும் என்பது இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது கவசமாய் இருந்து நம்மை காக்கும். கலியுகத்தில் நமது பிணிகளுக்கு - அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி - உற்ற மருந்தாக விளங்குவது 'வேல்மாறல்' என்னும் மஹாமந்த்ரமே ஆகும். மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.கலி யுகத்தில் தர்மதேவதையின் நிலை!
தர்மமானதை ஒரு பசுவாக முதலில் உருவகப்படுத்தி க்கொள்ளுங்கள். நான்கு யுகங்களில் முதல் யுகம், கிருத யுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் யாவரும் தத்தமது தர்மங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு இருக்கும்.
அடுத்த யுகமான திரேதா யுகத்தில், மனிதர்களுக்கு தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில், பசு ரூபத்தில் உள்ள தர்ம தேவதை தனது ஒரு காலை இழந்து மற்ற மூன்று கால்களுடன் சிரமப்படும். அதாவது தர்மம் உலகில் முழுமையாக இல்லாது ஆங்காங்கு குறைந்துகாணப்படும்.
அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணம் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு ஒரு பசு எவ்வளவு சிரமப்படும் என்று யோசித்து பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்திற்கு ஏற்படும். தற்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலுடன் திண்டாடும். அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு ஓங்கியிருக்கும். அதாவது ஆங்காங்கே தர்மம் திண்டாடிக்கொண்டிருக்கும். இப்போது கலியுகம்தொடங்கி 5100 வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை உணர முடிகிறது. இன்னும் கலியுகத்தில் பாக்கி ஆண்டுகள் இருக்கின்றன. இனி போகப் போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதை காண முடியும். கண்ணிருந்தும் குருடர்களாக மக்கள் வாழும் காலகட்டம் இது.
இப்படி தர்மத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் பற்றுக்கள் குறைந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் 'வேல்மாறல்' போன்ற ஒரு சர்வ ரோக வினை நிவாரணியை பற்றி உங்களுக்கு தெரியவருகிறது, அது குறித்த செய்திகள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது என்றால், நீங்கள் பாக்கியசாலிகள் தானே?
வேல் வினைகளை வேரறுக்க வல்லது. 'வேலுண்டு வினையில்லை" என்பது அருளாளர் வாக்கு. 'அச்சம் அகற்றும் அயில் வேல்' எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். 'வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்' என்று கந்தரநுபூதியும், 'வினை எறியும்வேல்' என்று திருப்புகழும் போற்றுகின்றன.
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்' என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்' என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும். பாம்பன் சுவாமிகள் இதனை 'படை அரசு' என்று போற்றுவார். படைநாயகம்' என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை: அயில், ஆரணம், உடம்பிடி, எஃகம், எஃகு, குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு.
முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். அதற்கு 'வேற்கோட்டம்' என்று பெயர். 'கோடு' என்றால் மலை (கிளை என்றும் பொருள் உண்டு. பல கிளைகளால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் என்றும் கூறுவர்). அக்காலத்தில் மலைப் பகுதியில் அமைந்த கோயிலை கோட்டம் என்று அழைத்தனர்.
ஆக, வேலாயுதத்தைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் நீங்கும். 'வேலின்றி கந்தனைப் பூஜை செய்தால் பயன் வீண்படுமே... (வேல் அலங்காரம்)', 'வேல் வடிவாம் தெய்வமே', 'வேல் தெய்வமே' 'அயில் தெய்வமே' என்றெல்லாம் குறிப்பிடுவதால் வேலனே வேலாகும்; வேலே வேலனாவான் என்பது புலனாகும். வேல் வழிபாடே திருவருளை எளிதில் பெறச் செய்யும்.
வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம்.
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் 'மணி, மந்திரம், ஒளஷதம்' என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: சீர்பாத வகுப்பு மணி வகுப்பு 2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு ஒளஷத (மருந்து) வகுப்பு.
இவற்றுள் உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது 'வேல் வகுப்பு' என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.
வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4=64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை Description
'வேல்மாறல்' என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.
மிக முக்கியமாக இந்த வேல் மாறலை தொடர்ந்து 16 முறை ஒரே நாளில் தொடர்ந்து பக்தியுடனும் முழு அர்ப்பணிப்புடனும் கேட்டல் கண்டிப்பாக அற்புதம் நிகழ்த்தும் என்பது சத்தியவாக்கு
#velmaaral
#murugan
#muruganvelmaaral
#omkarjyothi
#tamil
#ivothisuresh
velmaaraljyothisuresh
#religion
#tuesday
#வேல்மாறல்
#ஓம்கார் ஜோதி