திண்டுக்கல் முஜிப் பிரியாணி, திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக மொய் விருந்து நிகழ்வு நடத்தினர். இந்த மொய் விருந்து திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில் நடைபெற்றது. இந்த மொய் விருந்தில் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, பீர் நீ, தயிர் வெங்காயம், தால்சா மற்றும் நெய் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. இங்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த பணத்தினை வைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருந்து முடிந்த பின்பு பத்து ரூபாய் முதல் பல ஆயிரங்கள் மொய் விருந்தில் கலந்து கொண்டவர்கள் வைத்துச் சென்றனர். முடிந்ததும் இல்லையினை எடுத்து பின்னர் பணத்தினை வைக்கும் பொழுது கடையின் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் கண்கலங்கிய காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது. இவ்வாறு மொய் விருந்து மூலம் கிடைக்கப்பெற்ற பணம் வயநாடு மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களால் நேரடியாக கேரள மாநிலம் சென்று உதவுவதற்கு இல்லாத சூழ்நிலையில் தற்பொழுது மொய் விருந்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்றதை அளித்து அண்டை மாநிலமான கேரள மாநில சொந்தங்களுக்கு உதவுவது தங்களது கடமை. இந்த இந்த வாய்ப்பை தங்களுக்கு அளித்த முஜிப் பிரியாணி கடை நிர்வாகத்தினருக்கு மிகுந்த நன்றியினை விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.