Рет қаралды 153,885
தாம்பூலம் என்னும் வெற்றிலையில் எத்தனை மகிமை ரகசியம் இருக்கிறது என்று தெரியுமா? பரிகார மூர்த்தியாக விளங்கும் சனிபகவான் சன்னதி தவிர்த்து மற்ற சனி ஆலயங்களில் விபூதியை தவிர்த்து மற்ற பூஜை பொருட்களை கூட வாங்க மறுப்பார்கள், தயங்குவார்கள். காரணம் சனி எங்கே கூடவே வந்துவிடுவாரோ என்கிற அச்சம். ஆனால் விபூதி பிரசாதம் போலவே வெற்றிலை பாக்கும் புனிதமானது என்பது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக அழைப்பதற்கு வெற்றிலை பாக்கு முக்கியமான ஒன்று. இன்று காலம் மாறி இருக்கலாம். இந்த சம்பிரதாய முறைகளில் மாற்றங்கள் இருக்கலாம். நேரில் அழைப்பு என்பது போய், போனில் தகவல் சொல்லும் காலம், திருமண அழைப்புகளை வீடு வீடாக நேரில் சென்று அழைப்பது குறைந்து, சம்பள ஆட்கள் கொடுக்கிற காலம். என்றாலும் வெற்றிலையின் மகிமை என்றுமே மாறாது.