Рет қаралды 491,413
In this video .
The personality is k s Raja
K.S..ராஜா பற்றி ஆனந்த விகடனில்...... (1986)
மதுரை, காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத்துடன் ரசிகர்கள் கூட்டம்!
இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்கவும் ஆர்வத்துடன் பரபரத்தனர்!
'பராக்' சொல்வதுபோல் முதலில் ஒருவர், "வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா வருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந்தோம்........
மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்......'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது!
சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார்.
தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர்,
''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன்,
''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்'' என்றார் அந்த மாணவி.
''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே!'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது!
அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்!
மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்......
''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்தது.
அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னை அந்தப் பணிக்கு நியமித்தார்!
சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன்.
மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சிக்கு, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன!
தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி’க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு!
ஆரம்பத்தில், 'வழக்கமான ஒலிப்பரப்பு முறைக்கு எதிராகச் செயல்படுகிறேன்' என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள்.
ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றி, என்னையும் விருப்பம் போல் செயல்பட வைத்துவிட்டது!
நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பினேன். உடன் இருப்பவர்களே காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன? இலங்கை வானொலியைவிட்டு இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள்!
ராணுவத்தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.
சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?!"
- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!
Every one In 1970 's and 1980'
Malarum ninaivugal
U enjoy this
Pls subscribe and support my channel