Рет қаралды 458
அன்பே அபிராமி
நூல் வெளியீட்டு விழா.
எழுத்தாளர், ஆடிட்டர், வரலொட்டி ரெங்கசாமி எழுதிய
அன்பே அபிராமி நூல் வெளியீட்டு விழாவில், இன்று காலை மடீட்சியா அரங்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். ஸ்ரீ மதி
தலைமை தாங்கி வாழ்த்தினார்.
சிவாகமம் ஆகம ஆசிரியர், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயம்,
சிவ ஸ்ரீ கார்த்திகேய சிவம் நூலினை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.
நூலின் முதல் படியை இதயங்கள் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்
மற்றும்
ஜெய கிருஷ்ணா பிளவர் மில்ஸ் உரிமையாளர் ஆர் கே மோகன்
பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஆடிட்டர் இரா. சுந்தரம் அறிமுக உரை ஆற்றினார்.
நூலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றினார்.
பார்வையாளர்கள் சார்பில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்,
நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். மீனாட்சி சுந்தரம் பேசினர்.
மூத்த வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் விஜயன், பேராசிரியர் தீனதயாளன் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சுதேசி இயக்க ராஜாஜி உள்ளிட்ட நண்பர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சமூக சேவகி பானுமதி சுவாமிநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.