Рет қаралды 9,112
Song : Sayi Saritham | Tamil Lyrics
Singer : Sudarsan
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasongs#sairam#baba
#tamildevotionalsongs#anushaudio
பாடல் : சாயி சரிதம் | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : சுதர்சன்
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
ஓம் ஸ்ரீ சாயி நாதனே உனை நாளும் மறவோமே
நீயின்றி உலகில்லையே நின்பாதம் சரண் நாங்களே
சாயி சரிதம் பாடுவோம் சாயி நாமம் போற்றுவோம்
சாயி மகராஜனே சரணமென்று வாழுவோம்
எங்கிருந்து வந்தாயோ ஏழுலகை ஆழ்வதற்கு
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
மங்களமே புரிவதற்கு மண்ணிறங்கி வந்தாயோ
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
சாதிமத பேதமிலா சத்குருவாய் வந்தவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
ஆதியந்தமில்லாமல் அவனியாளும் ஈஸ்வரனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
மேதினியில் நல்லதெல்லாம் நல்கும் சாயிநாதனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
ஜோதியினை நீர்கொண்டு ஏற்றிவைத்த நாதனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
பெற்றவர் யார் பிறந்த இடம் அறியாமல் இருந்தோமே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
உற்றவனாய் உடனிருந்து ஊழ்வினைகள் களைபவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
பற்றுடனே உன்னடியில் பாவங்களை இறக்கிவைப்போம்
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
குற்றங்களை மாய்த்திடவே குருவாக வந்தவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
கற்றவரும் மற்றவரும் கழலடிகள் வணங்கிடுவார்
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
சுற்றமெல்லாம் சூழ்ந்துவர செய்பவனே சுந்தரனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
கல்யாணக் குழுவொன்று சீரடிக்கு வந்ததய்யா
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
ஆலமரம் அடியினிலே வாகனம்தான் நின்றதய்யா
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
ஒருவர் பின் ஒருவரென அனைவருமே இறங்கினரே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
இளம்வயது பக்கிரியாம் உனைக்கண்டு தொழுதனரே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
ராசாயி எனச்சொல்லி அழைத்தாரே மகல்சாபதி
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
அதுமுதலாய் சாயிபாபா என்று உனை அழைத்தோமே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
வேப்பமரம் அடியினிலே வீற்றிருந்து இளையவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
காப்பதற்கு வடிவெடுத்த கருணைமனம் கொண்டவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
பாதாள அறையினிலே பலகாலம் இருந்தவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
ஐந்துமுக விளக்கேற்றி தியானங்கள் புரிந்தவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
இரவெல்லாம் கண்விழித்து இறையருளை வளர்த்தவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
பற்றற்ற துறவியென பகலெல்லாம் திரிந்தவனே
பூமியினை காக்கவந்த புண்ணியனே சாயிராம்
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies