Рет қаралды 21,905
எலிசபெத் எலியட் (1926 - 2015) திறமையான எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், மொழியியலாளர். அவருடைய கணவர், ஜிம் எலியட் நற்செய்தி அறிவிப்பதற்காகாக 1956இல் கிழக்கு ஈக்குவடாரில் அமேசான் வடிநிலத்தில் வௌராணி செவ்விந்தியர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களால் ஈட்டியெறிந்து கொல்லப்பட்டார். பின்னர் எலிசபெத் தன் கணவரைக் கொன்ற ஆதிவாசிகளுக்கு நற்செய்தி அறிவிக்கத் தன் கைக்குழந்தை வலேரியுடன் அங்கு மிஷனரியாகச் சென்று, இரண்டு ஆண்டுகள் அவர்களோடு வாழ்ந்தார். தென் அமெரிக்காவில், ஈக்குவடாரில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து அங்கு பல்வேறு பழங்குடியினருக்கு நற்செய்தி அறிவித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்குத் திரும்பிய அவர், இருபத்தைந்து புத்தகங்கள் எழுதினார். பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றினார். எலிசபெத் தன் எழுபதுகளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.