Рет қаралды 65
#dailytamilbibleverse #vaarthaitv #vaarthai #tamilbibleverse #tamilbible #dailytamilbible #tamilgospelmessage
Follow Us On Facebook: / vaarthaitv
Follow Us On Instagram: / vaarthaitv
Follow Us On Sharechat: sharechat.com/...
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
ஆண்டவரே என் கவலைகள் எல்லாம் எடுத்துப் போடும், என்று சிலர் ஜெபிக்கின்றனர். பிரச்சனை வேறு, கவலை வேறு. பிரச்சினை உங்கள் இருதயத்தில் உருவாக்குவது தான் கவலை. உங்கள் இருதயத்தில் இருப்பது. பிரச்சினை வெளியே இருப்பது. உங்கள் பிரச்சனை உண்மையானதாக இருக்கலாம், ஆனால் கவலை என்பது ஒரு தோற்றமே. அது ஒரு உணர்வுதான். அந்த உணர்வை நிச்சயமாய் உங்களால் மாற்ற முடியும். கவலை என்ற உணர்வை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள் என்றால், பிரச்சனையை உங்கள் ஆண்டவர் மாற்றுவேன் என்கிறார். ஆண்டவர் உங்கள் கவலைகளை எடுக்கிறவர் அல்ல. உங்கள் கவலையை உருவாக்குகிற பிரச்சினையை மாற்றுகிறவர். உங்கள் கவலைகளை நீங்கள்தான் அவர் மேல் வைத்து விட வேண்டும். ஆண்டவர் உங்கள் கவலையை எடுத்துக் கொள்ள மாட்டார். நீங்கள் தந்தால் பெற்றுக் கொள்வார். நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால் ஆண்டவர் தான் செய்ய வேண்டியதை நிச்சயம் செய்வார்.
அறிக்கை:
அவர் என்னை விசாரிக்கிறவரானபடியால் என் கவலைகள் எல்லாம் அவர் மேல் வைத்து விட்டேன். அவரே என் வழியே வாய்க்கப் பண்ணுவார் ஆமென்
தொடர்புக்கு:- போதகர் P.V. ஆரோன் மாணிக்கராஜ். ஜி எம் ஸி செங்கல்பட்டு.
Call:- 9994209793 # 8667504626
Email: aronrhema@gmail.com