Рет қаралды 69
கும்பகோணம் திருப்புகழ், முருகன் பக்தி பாடல்கள், மாலைதனில் வந்து.....
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாசமலர் சிந்து...... குழல்கோதி
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க மால்பெருகி நின்ற ........ மடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணின்று தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித்
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி சாலமிக நொந்து ...... தவியாமற்
காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி காதலுமை மைந்த ...... எனவோதிக்
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள் காண அரு ளென்று ...... பெறுவேனோ
கோலமுட னன்று சூர்படையின் முன்பு கோபமுட னின்ற ...... குமரேசா
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப கோணநகர் வந்த ...... பெருமாளே.