Рет қаралды 54,585
#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை
திருவெம்பாவை - 9
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
திருப்பாவை - 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
ஆத்ம ஞான மையம்