கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

  Рет қаралды 2,397,224

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

Күн бұрын

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.
இரண்டாவது பாடல்:
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
மூன்றாம் பாடல்:
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
நான்காம் பாடல்:
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
ஐந்தாம் பாடல்:
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.
ஆறாம் பாடல்:
வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.
ஏழாம் பாடல்:
செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
எட்டாம் பாடல்:
வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.
ஒன்பதாம் பாடல்:
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.
பத்தாம் பாடல்:
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
பதினோறாம் பாடல்:
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!
பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
பயன்கள்:
நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.

Пікірлер: 365
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw 6 күн бұрын
ஒரு வருடமாக கேட்டு வருகிறேன் என் அன்னை திருக்கடவூர்அபிராமி அருளால் சொந்த வீடு அமைத்து கொடுத்தாள். என் அன்னை யை நித்தம் வணங்க அனைத்து சௌபாக்கியங்களும் தருவாள்.🎉🎉🎉🎉
@sankarlalbowna9639
@sankarlalbowna9639 Жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் குரல் இவ்வுலகில் பக்தியும், ஆன்மீகம் உள்ள வரையில் சிரஞ்சீவியாக இருப்பார் . - சங்கர்லால்
@supernova3908
@supernova3908 2 ай бұрын
Kaduvul namakkaga avarai padaithu ullar, ❤❤
@Samy-t4h5h
@Samy-t4h5h Жыл бұрын
ஞானப்பால் உண்டவன் அருளிய ஞான பாடலை அதே தலத்தில் இருந்தே பாடகனாய் பிறந்து மறுபடியும் இவர் குரல் மூலம் கேட்கும் பாக்கியம் நமக்கு வாய்ப்பு தந்த இறையருளை எண்ணி வியக்க வைத்தவன் காலடியினை வணங்குவேன்
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 Жыл бұрын
டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல் அனைத்தும் சிறப்பு.கோளறுபதிகம்.அதன்மகுடம்.!!🎉 வணங்கி நாடுவோம்.இறைவன்.திருவடிகள்🎉🙏🙏🙏🙏🙏💥
@ganesansairam9415
@ganesansairam9415 Жыл бұрын
மெய் மறந்து விட்டேன்
@rumaladevi3421
@rumaladevi3421 3 ай бұрын
Vanakam iyyavooku.
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 9 ай бұрын
ஓம் நமசிவாய 😊😊😊😊😊😊
@thamaraiselvam3622
@thamaraiselvam3622 7 ай бұрын
வருங்கால சந்ததியினர் இப் பதிகம் கேட்க அறிவுறுத்த வேண்டும்.. இதன் பலனை கூறவேண்டும்.. சந்திராஷ்டமம்... அஷ்டமச்சனி பல நவக்கிரகங்கள் நன்மையே அளிக்கும்.. பிள்ளைகள் குழம்பி இருக்கும் போது இப் பதிகம் கேட்க சொல்லவேண்டும்... ஆன்மீகம் வளரணும்...சில துரோகிகள் விபூதி பூசதே.குங்குமம் வைக்காதே பூ இதே போன்று பள்ளிகள் சொல்வதை கேட்காமல் காலையில் குழந்தைகளுக்குத் விபூதி பூசி அனுப்பவேண்டும்...
@SanjeeviSanjeevi-yr6wh
@SanjeeviSanjeevi-yr6wh 6 ай бұрын
Play a P
@venkateswarandoraiswami7384
@venkateswarandoraiswami7384 5 ай бұрын
Very true.
@msbabhu
@msbabhu Ай бұрын
உண்மை நெற்றியில் திருநீறு இல்லாத நெற்றி பாழ் நெற்றி என்பார்கள் மூத்தோர் ஓம் நம சிவாய
@rajapackiyamsr9850
@rajapackiyamsr9850 Жыл бұрын
வாழ்க்கையில் நாம் இழந்த பெரிய சொத்து அன்புக்கூரிய சீர்காழியார்தான்..!!
@kothandanp7184
@kothandanp7184 17 күн бұрын
தெய்வீக குரல் படைத்த சீர்காழி கோவிந்தராஜன் ஐய்யா அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் இப்பூவுலகில் உயிருடன் இருந்திருக்க வேண்டும் இவரது குரல் தேவ லோகத்தில் ஒலிக்க வேண்டும் என்று கருதி அவரை அங்கு அழைத்துக் கொண்டார் பரமன். மன அமைதிக்கும் நமக்கு ஏற்ப்பட்ட இடர்களை எல்லாம் போக்குவதற்கும் இந்த கோளாறு பதிகம் மிகவும் உதவியாக இருக்கும் ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !! ஒங்குக சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக பாடல்கள்!!!
@om8387
@om8387 Жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் குரலில் எழுத்துடன் பதியப்பட்ட இந்த கோளறு பதிகம் மிக மிக அழகான இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்
@kumarankumaran1196
@kumarankumaran1196 Жыл бұрын
😂ttyl😊
@kakashi-ey4fx
@kakashi-ey4fx Жыл бұрын
​soul stirring
@rajeshh6993
@rajeshh6993 Жыл бұрын
அருமை ❤️❤️🙏🙏🙏 நன்றி
@jayapaljayapal7353
@jayapaljayapal7353 10 ай бұрын
22:35 sirgaligo be indarajankolarupadhigam
@DevikaChidambaranathan-tn8nq
@DevikaChidambaranathan-tn8nq 10 ай бұрын
​N
@vellaivellai9613
@vellaivellai9613 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் இறைவன் பாடல் ஒலிக்கும் ஐயா உங்கள் பாதங்களை தொட்டு வணங்கிகிறேன்
@malathielango918
@malathielango918 Жыл бұрын
10:13 😊
@baskars4093
@baskars4093 17 күн бұрын
பதிகம் மிக அருமையான பதிவு. இடையில் விளம்பரங்கள் இடையூறு விளைவிக்கிறது. பக்தி பாடல்களில் தவிர்க்க வேண்டும்
@dineshprabhu4004
@dineshprabhu4004 Жыл бұрын
காலை யில் இதை கேட்டுதான் வேலை துவங்கும்
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போர்ட்டி ஓம் சரவணன் பாவா 🙏🏻🙏🏻🙏🏻
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Жыл бұрын
ஐயாவின் குரலில் கேட்கும் தெய்வத் திருமுறைகளில் இது ஒரு அற்புதத் தேன் என்றால் சுந்தரமூர்த்தி நாயனார் படத்தில் ஐயா பாடிய "எற்றான் மறக்கேன் ","உரைப்பார் உரை உகந்து"என்ற அவிநாசித் தலப் பதிகத்தின் திருப்பாட்டுகளும்,"தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் "என்ற திருத்தொண்டத் தொகையும் ,"வெறுத்தேன் மனை வாழ்க்கையை"என்னும் "தலைக்கு தலைமாலை"பதிகத் தேவாரமும்,"பொன்னார் மேனியனே"பாடலுடன் தொடங்கும் பதிகத்தின் பாடல்களும் தேவாமிர்தம்...நமச்சிவாயம்.
@subramaniamrajagopala4670
@subramaniamrajagopala4670 Жыл бұрын
Grown up in my childhood hearing my mother recite this everyday. Am 78 years now and blessed by this recital. Shambo mahadeva deva.
@BalajiBalasubramanian-i9u
@BalajiBalasubramanian-i9u Ай бұрын
I heard this slogam will bring big changes in life in a good way. Any experience please. I hear this everyday
@palanisai8479
@palanisai8479 Жыл бұрын
தெய்வீக தெய்வீகமான குரல் மந்திர🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivalingam2176
@sivalingam2176 Жыл бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க , 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 இந்த இடர்களையும் பாடல், அனைவருடைய இன்னல்களையும் கலைந்து வாழ! எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🎉 👌 சூப்பர் அருமையான பாடல் 👍. 🎉🎉 "நன்றி! அன்புடன். ச சிவலிங்கம்.
@sabari3187
@sabari3187 Жыл бұрын
🙏🙏
@venkatachalamr6725
@venkatachalamr6725 11 ай бұрын
திரு நீலகண்டன் திருமறை தீராத்துயர் தீர்க்கும் மாமருந்து!
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 Жыл бұрын
மனித குலம் இழந்தாலும் இறைவன் உங்களை இழக்கவில்லை ஓம் நமசிவாய
@bala9083
@bala9083 Жыл бұрын
பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத குரல்வளம் 0:53 ஐயாவின் புகழ் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்
@nagendran.s961
@nagendran.s961 5 ай бұрын
எழுதியது ஓர் தெய்வம் பாடியது ஓர் தெய்வம் தமிழே ஆனந்தம்
@umaravikanth-jc8xq
@umaravikanth-jc8xq 15 күн бұрын
இசை அமைத்து கொடுத்த தெய்வத்தையும் மனதில் கொள்ள வேண்டும் - இந்த பதிகம் நமக்கு கிடைத்த தேவாமிர்தம்
@om8387
@om8387 Жыл бұрын
ஐயாவின் குரலில் தேவாரமானாலென்ன பக்தி பாடலானாலென்ன கேட்கும்போது உள்ளமே உருகாதோ இசை வள்ளலாய் என்றுமெம் மனதிலிருக்கும் சீர்காழிகோவிந்தராஜயன் ஐயாவின் பாடல்களைக் கேட்பதில் மனதிலோர் தெய்வீக உணர்வு தோன்றும்
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow Жыл бұрын
வணக்கம்.இனியவர்களே. நல்லவன் வாழ்வான்! என்றும்....குற்றால அருவியிலே குளித்தது போலும் இருக்குமே! ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றானே! இவைகளையும்கூட இரசிக்கலாங்க!... நன்றிங்க.
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
இந்த கோளறு பதிகத்தை யார் பாடியும் என் கல் மனம் இளகவில்லை. எனது உயிரினும் மேலான ஐயா அவர்களின் இந்த பாடல் பதிவை கேட்ட பொழுது என் கண்கள் நீர்பெருக்கெடுக்க, என் உள்ளம் கரைந்தது. அதுமட்டும் அல்லாது என்னை எங்கோ இனம் புரியாத உலகத்துக்கு அழை தது சென்று அளவற்ற சொல்ல இயலாத பேரின்பத்தை தந்தது இன்றும் அது தொடர்கின்றது. 😊 இசைதெய்வமாகி எங்கும் விரவி நிற்கும் ஐயா அவர்களின் திருவடிகளுக்கு அனந்தங் கோடி வந்தனம். வந்தனம்.
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 Жыл бұрын
அருமை..🙏🙏🙏💐
@thirunavukkarsuc3523
@thirunavukkarsuc3523 Жыл бұрын
Pannodu koodia paadal
@speedygaming8614
@speedygaming8614 Жыл бұрын
Qqqaaaaaaàaa😊
@rameshjayasri3197
@rameshjayasri3197 6 ай бұрын
கோளறுபதிகம் கேட்கும்போது மனம் அமைதியாகிவிடுகிறது. சீர்காழி ஐயாவின் வெண்கலக் குரலில் தெய்வம் குடிகொண்டுள்ளது. ஓம் நமசிவாய!
@SubhaJp
@SubhaJp 2 ай бұрын
தெய்வீக குரல் 🙏🙏🙏🙏🙏
@sasthadairyfarm3179
@sasthadairyfarm3179 3 күн бұрын
மனம் அமைதி பெறுவது உண்மை.
@managementaccountingmadeea5236
@managementaccountingmadeea5236 Жыл бұрын
There is no replacement to this beautiful voice, what a clarity. Miss him a lot.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
True
@sampathkumar3018
@sampathkumar3018 3 ай бұрын
ஆஹா! அந்த கடவுள் இதை கேட்டு அனைவருக்கும் நலமே அருள்வார் ! தெய்வீகக் குரல் !
@skanthavelu
@skanthavelu Жыл бұрын
I first heard this beautiful Kolaru Thirupadhigam in September 1998, over a year after I became a Hindu. Divine memories.
@keerthanaramasamy711
@keerthanaramasamy711 Жыл бұрын
So ,what religion you were following before becoming hindu.You are from which country?I'm just curious to know because this song can be understood only by tamil hindus.
@skanthavelu
@skanthavelu Жыл бұрын
@@keerthanaramasamy711 I am from Canada and am of Ukrainian descent with a little bit of Irish, Scottish, English and Dutch thrown in.
@skanthavelu
@skanthavelu Жыл бұрын
​​@@keerthanaramasamy711 Prior to becoming a Hindu, I was not baptized in any religion. But for a few years during the time from late 1991/early 1992 until 1997 when I was researching about Hinduism and Hindu beliefs, teachings and practices, I called myself a Christian with Hindu beliefs. I had a desire to visit a Hindu temple after seeing some of them on TV and in books. Then on 13th July, 1997, I visited a Hindu temple, namely, the Maha Ganapathy Society of Alberta in the city of Edmonton, for the first time. After the aaratthi got over, I introduced myself to everyone present and told them who am I and expreseesed a desire to become a Hindu, which was welcomed by everyone present in the temple.
@keerthanaramasamy711
@keerthanaramasamy711 Жыл бұрын
@skanthavelu oh nice .May lord shiva bless you brother.
@skanthavelu
@skanthavelu Жыл бұрын
​@@keerthanaramasamy711 நன்றி!
@vishalk1606
@vishalk1606 2 ай бұрын
நான் ஸ்கூல் படிக்கிறகாலத்தில் (1980) பாட்டு க்ளாஸ் நடத்துவங்க அதில் இந்த பாட்டு முதல் பாடல் சொல்லிகுடுப்பாங்க 👌👌👌👌இத்தனைக்கும் மேல நான் படித்தது அரசு பெண்கள் பள்ளியில் 🥰😍😍ஆனால் இப்போ😉ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@TamilBoysYT
@TamilBoysYT Жыл бұрын
ஐயா அவர்களின் வெண்கல குரலில் விநாயகர் அகவல்,சின்னஞ் சிறு பெண் போலே...இப்போது இந்த பாடலும் சேர்ந்து விட்டது....பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...🎉
@srinivasanvenkatesan9410
@srinivasanvenkatesan9410 Ай бұрын
Sirlazi Anna padiyathu mika arputham
@Devan-t3d
@Devan-t3d 24 күн бұрын
குரலாள் குவலயம் மகிழ எம் சிவனை வாழ்த்தூம் உம் புகழ் நிலை பெ றும் உலகம் உள்ளவரை
@anandakrishnanallendrampil777
@anandakrishnanallendrampil777 Жыл бұрын
காலத்தால் அழியாத தேவாரம். அருமை.
@thulasiramangovindarajulu1384
@thulasiramangovindarajulu1384 8 ай бұрын
இந்த ஜென்மத்தில் இந்த பாடலை கேட்பதுமகிழ்ச்சி அளிக்கிறது...சிவசிவ..
@karbagamkarbagam6411
@karbagamkarbagam6411 Жыл бұрын
ஓம் நமசிவாய அருமையான பதிவு அருமை அருமை
@ChachaMummy-zu3qu
@ChachaMummy-zu3qu 21 күн бұрын
சனாதன தர்ம் மத்தை பின்பற்றி வாழ்கின்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரின் வீட்டிலும் ஒலிக்க வேண்டிய பதிகம்! நம் சந்ததியினருக்கு இந்த பதிகத்தின் அர்த்தமும் அன்றாட வாழ்வில் இது கேட்பதன் அவசியமும் சொல்லித்தர வேண்டும்! சனாதனம் என்று சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், அதன் அர்த்தம், ஆழம் தெரிந்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் சனாதன தர்ம்மத்தை ஒழித்துக்கட்டணும் என்று அரசாங்க லெவலில் பேசுறது கேட்கும்பொழுது கவலையாக இருக்கிறதல்லவா? நாம் செய்ய வேண்டியது நம் சந்ததியினருக்கு இது போன்ற பதிகங்கள் சொல்லித் தருவதுதான் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்! வாழ்க சனாதனதர்மம்!
@bharathidarshanram249
@bharathidarshanram249 11 ай бұрын
Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@milonraja3771
@milonraja3771 Ай бұрын
முருகா நிம்மதி வேண்டும் ❤❤❤ மகிழ்ச்சி வேண்டும் நன்றி ❤❤❤
@Vijaya-q1s
@Vijaya-q1s Ай бұрын
Want comments
@Arjunan-l2w
@Arjunan-l2w 10 күн бұрын
ஸ்ரீ லஷ்மி நரசிம்ம தேவாய நம! பகவானே என் கைகால் ஆரோக்கியத்தை வழங்கு பகவானே தாள் பனிகின்றேன்!
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 Жыл бұрын
அருமையான குரல் வளம் 😊😊 மனநிறைவான பாடல் 🙏🙏🙏 இவ்வையகம் உள்ளவரை உங்கள் கம்பீர குரல் என்றும் அழியாது ✨✨✨✨💫💐💐💐
@kumaresana5805
@kumaresana5805 Жыл бұрын
ஒம் நமசிவாய போற்றி போற்றி
@kumaresan-yz1ob
@kumaresan-yz1ob Жыл бұрын
வணக்கம் நன்றி 🎉
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Жыл бұрын
மிகவும் அற்புதம். நன்றி. வேல் விருத்தம், மயில் விருத்தம் கந்தர் அந்தாதி,அபிராமி அந்தாதி, சகலகலாவல்லிமாலை...இவை ஐயாவின் குரலில் இருந்து நெஞ்சை விட்டு எப்போதும் அகலா. நமச்சிவாயம்.
@anbesivan6499
@anbesivan6499 Жыл бұрын
ஓம்நமசிவாய ❤❤❤ உஷா கோவில்பட்டி.
@Smutthusamy
@Smutthusamy Жыл бұрын
அய்யாவின்தேன்கலந்தகுரலைக்கேட்ககொடுத்துவைத்துஇருக்கவேண்டும்வாழ்க‌அவரதுபுகழ்சங்கரமுத்துச்சாமி
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகப் பதிவு.தெளிவான உச்சரிப்பில் வெண்கல குரலோன் சீர்காழி ஐயா குரலில். ..(எந்த இசைவடிவமானாலும்) கேட்கையில் மனதுஉருகிவிடும்.. அற்புதமான பதிகப்பதிவிற்கு மனம்நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏💐💐💐💐💐..🌺🌺🌺🌺🌺🙏
@deivasigamani7913
@deivasigamani7913 Жыл бұрын
காதில் வாங்காமல் இருக்கமுடியவில்லை
@krajajam4386
@krajajam4386 Жыл бұрын
20:07
@gururadha3840
@gururadha3840 8 ай бұрын
சூப்பர் அடியேன் காலை வணக்கம்
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 14 күн бұрын
பாடலின் இடையில் வரும் விளம்பரங்களை தவிர்த்தால் அருமையாக இருக்கும். பாடலை விரும்பி கேட்பார்கள். நன்றி! வாழ்க வளமுடன்👍👍👍👍👍👍
@VeliappanV
@VeliappanV Ай бұрын
தெய்வீககுரலோன் சீர்காழியார் பாட கேட்கும் போது இனிமை🙏🙏🙏🙏
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw Жыл бұрын
அய்யா அவர்கள் குரலில் மிக அற்புதம்.
@Kathirvelu.JKathirvelu.J
@Kathirvelu.JKathirvelu.J 2 ай бұрын
🙏திருசிற்றம்பலம், பொன்னும்பளம், அருணாச்சலம், மஹாதேவ, மஹாலிங்க, மதியர் சுனாசா, 🙏🙏🙏🙏🙏🙏
@harinarayanana6908
@harinarayanana6908 Жыл бұрын
இவர்கள் காலத்தில் நானும் வளர்ந்தேன் என்பது பெருமை❤❤❤
@kumaresana5805
@kumaresana5805 10 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி போற்றி
@nambinachiyar2085
@nambinachiyar2085 Жыл бұрын
Thank u for uploading Kolarupathigam and shanmugakavasam
@TheB657
@TheB657 Жыл бұрын
வரலாறு தங்கம் 🙏🕉🛕🐚🌿🪔☀🚩🏹
@subbaiyanrathakrishnan5794
@subbaiyanrathakrishnan5794 9 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் புகழ் ஓங்குக
@sivaanbee
@sivaanbee 10 күн бұрын
Super song நமசிவாயம் வா எல் க
@sundarsundar9420
@sundarsundar9420 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏❤❤🎉🎉
@ankprints5277
@ankprints5277 7 ай бұрын
மனதை வளப்படுத்தும் வெண்கலக் குரல். காலத்தால் அழிக்க இயலாத இசைப் பெட்டகம். என்றும் நம் நினைவில் ஐயா சீர்காழி கோவிந்தராசன்.
@rajagopalakrishnanc1710
@rajagopalakrishnanc1710 Жыл бұрын
சீர்காழி என்றால் சீர்காழி தான் பக்தி பாடல்களுக்கு
@rajshreesankpal4418
@rajshreesankpal4418 3 ай бұрын
So divine🙏🏻I was guided to listen this for some days. I could complete it. I am non Tamil 🙏🏻🙏🏻🙏🏻
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 14 күн бұрын
மனம் உருகி கேட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் வரும் விளம்பரங்கள் நெருடலாக உள்ளது... இது போன்ற பக்தி பாடல்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்கலாமே...❤
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 12 күн бұрын
நாங்கள் அவற்றை முடக்கிவிட்டோம். நன்றி.
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 12 күн бұрын
மிக்க நன்றி ஐயா... இந்த எளியவனின் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு....
@dhanalakshmir4817
@dhanalakshmir4817 Жыл бұрын
Evergreen voice. Thank God.
@TamilBoysYT
@TamilBoysYT Жыл бұрын
Dr.Sirkazhi Sivasidhambaram avargalukku mikka nandri.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@varuntharsan
@varuntharsan Ай бұрын
தினமும் கோளறு பதிகம், சிவபுராணம் & பிழை பொருத்தல் பதிகம் கேட்கிறேன். மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. ஓம் நமசிவாய. தெய்வமே கோடான கோடி நன்றி.
@KandanS-gp4gz
@KandanS-gp4gz Жыл бұрын
ஐயா அவர்களின் புகழ் வாழ்த்துக்கள் நன்றி
@kalamathisathiyamoorthy203
@kalamathisathiyamoorthy203 5 ай бұрын
I've worked as Tr. in vedaranyam Gurukulam. Daily sts. Sing this song. In our family before a journey we never fail to sing this padam. Om Namachivaya
@jayavishwanathanjayavishwa6867
@jayavishwanathanjayavishwa6867 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@preminim2903
@preminim2903 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@ganeshanramaswamy5697
@ganeshanramaswamy5697 Ай бұрын
🎉very sweet and nicely
@sivasenthil930
@sivasenthil930 Ай бұрын
Om Muruga Potri 🙏🙏🙏
@somasundaramt7893
@somasundaramt7893 Жыл бұрын
தேன் இசை குரலோன் ❤
@nambinachiyar2085
@nambinachiyar2085 Жыл бұрын
Vallalarin deivamanimalai 31 songs ketu manapadam seithal nalla dicipline na vazhalam.vallalar murugar mel vaitha patturu,tears coming from our eyes
@RajaRaja-rz2sv
@RajaRaja-rz2sv 2 ай бұрын
ஒன்று நீ இல்லை அன்றி ஒன்று இல்லை ஹர ஹர மஹாதேவ
@SathiyarajSathya1981
@SathiyarajSathya1981 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க வளத்துடன்
@vasandaraanivadantharaani9156
@vasandaraanivadantharaani9156 Жыл бұрын
Very peaceful and quiet for soul
@nagalakshmisrinivasan3116
@nagalakshmisrinivasan3116 2 ай бұрын
The great singer for Bakthi and developing good singers in future.patham thottu vanagukiren Ayya ningel kuralal iraivani Khan munnal kondu vandeergal.
@SeeniSeeni-sr7vd
@SeeniSeeni-sr7vd 4 ай бұрын
இந்த பாடல் இனிமையாக இருக்கு
@DhanamAnbu-y3e
@DhanamAnbu-y3e 4 ай бұрын
ஓம் நமசிவாய நம
@kumarm3634
@kumarm3634 5 ай бұрын
வாழ்க அண்ணன் சீர்காழி ..மோட்சகுருதில்லை.10*8*24.
@nagaganesh1239
@nagaganesh1239 9 ай бұрын
உலகம் உள்ளவரையொலிக்கும்தெய்வீககுரல்.🙏🙏🙏🙏🙏
@chitraraghunathan2988
@chitraraghunathan2988 Жыл бұрын
Arumai,om nama shivaya,deiviha kural👌🙏🙏✌️
@30ganesan
@30ganesan 7 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏 சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களின் குரலில் கேட்டும் போது மனது உருகுகிறது 🙏
@bhanuradha3670
@bhanuradha3670 4 ай бұрын
ஓம்நமச்சிவாயநமஃ😊🙏
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
@maryappanudhai9279
@maryappanudhai9279 2 ай бұрын
என் குடும்ப சுமைகளை இறக்கி தா இறைவா
@naguleswarypojan7812
@naguleswarypojan7812 6 ай бұрын
நீங்கள் சீர்காழி அகத்தியர் மறுஅவதாரம்வாழ்த்துகள்ஐயா
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Жыл бұрын
This voice and the devotion is THE GIFT OF GOD . SRI SEERGHAZHI USED IT TO SING THE PRAISE OF THE GOD . HE NEVER SANG , EVEN FOR FILMS , ANY VULGAR OR IMMORAL MEANING SONGS . THE GREAT SOUL .
@Raghavan-ht1bi
@Raghavan-ht1bi 9 ай бұрын
yes...he is a divine soul. no doubt. In his last breath, he uttered thus: vaazgha vaiyagam; vaazgha valamudan...Om Namah Shivaya!!
@gnanasekara2667
@gnanasekara2667 10 ай бұрын
Excellent bakthi song forever 19:17
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 Ай бұрын
❤ Thiruchitrampalam ❤namasivaya valka ❤
@sotiespushpa
@sotiespushpa 5 ай бұрын
ஓம் நமோ பகவதே வாஸுதேவயா ஓம் மஹா கணபதி போற்றிஓம் நமோ பகவதே வாஸுதேவயா ஓம் மஹா கணபதி போற்றிஓம் நமோ பகவதே வாஸுதேவயா ஓம் மஹா கணபதி போற்றி
@sotiespushpa
@sotiespushpa 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jeevajothy2369
@jeevajothy2369 4 ай бұрын
அன்பே சிவம் 🙏🙏 சிவ சிவ சிவாய நம ஓம் 🪔🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindaramanpn9495
@govindaramanpn9495 7 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன்.அவர்கள் அதே குரல் Dr.சிவசிதம்பரம் இவர்கள் தெய்வீகம் குரலில் ராகங்கள் அதன் உச்சரிப்பு.இடையில் ஆலாபனை இசை கேட்க்கு போதுநமை மறப்பதும் புதிதல்ல வே.என்றும் செவிதேன்.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤ valgavalamudan ❤❤
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 3 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏
@ChachaMummy-zu3qu
@ChachaMummy-zu3qu 2 ай бұрын
கோளறு பதிகம் தினமும் காலையில் கேட்கணும் அதுவும் என் இஷ்டகுரலான சீர்காழி ஐயாவில் குரலிலே கேட்கணும் என்று ஆசைப்பட்டேன். தேடிகண்டுபிடிச்சிட்டேன். ரொம்பசந்தேஷமாக உள்ளது. ஐயா இந்தராகத்தில் பாடியது. நான் கேட்டதில்லை. இது எந்த ராகம் என்று தெரியலெ.சங்கீதம்படிக்காத எனக்கு ராகத்தை பற்றி ஒன்றும் தெரியாது, கேட்க அருமையாக இருக்கிறது.
@mageshadhitya6620
@mageshadhitya6620 Ай бұрын
⁰0⁰0
@Maruthamuthu-qq9xh
@Maruthamuthu-qq9xh Ай бұрын
🌹🌹🙏🙏🙏
@VelayuthamC-fk7gz
@VelayuthamC-fk7gz 12 күн бұрын
Thanks for sports.
@vijayrani164
@vijayrani164 8 ай бұрын
அனைவரும் இல்லத்தில் மகிழ்ச்சி உடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@sivachalapathiplwcs870
@sivachalapathiplwcs870 2 ай бұрын
முருகா சரணம்
@TamilarasanTamilarasan-k4t
@TamilarasanTamilarasan-k4t 4 ай бұрын
My like that is sang
@Boss-f3r4v
@Boss-f3r4v 27 күн бұрын
Om namah shivaya shivaya namah
@sangavaikumaravelu6291
@sangavaikumaravelu6291 4 ай бұрын
Miga arumai
@maheshkolpurath7336
@maheshkolpurath7336 Жыл бұрын
Very good nice full dinner TTHANKS
சண்முக கவசம்
21:15
Gundu payan view's
Рет қаралды 161 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Abirami Andhadhi | Lyrics | "Padmashri" Sirkazhi Govindarajan | ‘KaviArasu’ Kannadasan’s explanation
1:29:14
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 1,2 МЛН
SEETHAKALAPA SENTHAMARAI | VINAYAGAR AGAVAL | ORIGINAL | "PADMASHRI" SIRKAZHI GOVINDARAJAN
6:32
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 7 МЛН
Shanmuga Kavasam | சண்முக கவசம்
22:07
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 168 М.