Рет қаралды 23,187
காஞ்சித் திருநகரம். எந்தத் திசையில் திரும்பினாலும் கோயில்கள் நிறைந்திருக்கும் ஊர். மக்கள் பக்தியோடு நல்லொழுக்கமாக வாழ்ந்துவந்தார்கள்.‘கச்சி’ எனப்படும் காஞ்சியில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானின் பெயர், கச்சியப்பர். அவரை வணங்கும் குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டுவது மரபு.அப்படிக் காஞ்சியில் பிறந்த கச்சியப்பர்களில் ஒருவர் குமரகோட்டத்தில் குருக்களாகப் பணியாற்றிவந்தார். முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர், நல்ல புலமை நிறைந்தவர்.