Рет қаралды 142,392
பலன் தரும் பதிகங்கள் - இந்தப் பகுதியில் அடியார்கள் பாடி அருளிய பதிகங்களைப் பற்றியும், அது பாடப்பட்ட சூழலைப் பற்றியும், அதன் பலன்களைப் பற்றியும் தொடர்ந்து பார்க்க உள்ளோம்.
இது நமது வாழ்விற்கு தேவையான பலவகையான தேவைகளுக்கு உதவும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால் எல்லோரும் பலன் பெற வேண்டும் என்று திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் தொடர்ந்து தொகுப்பாக அளிக்கவுள்ளார்.
பதிகம் 1:
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே.
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே.
கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே.
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
பதிகம் 2:
விடகிலேன் அடிநாயேன்
வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்தம்
அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய
தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 1
செம்பவளத் திருவுருவர்
திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற்
கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை
வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 2
நணியானே சேயானே
நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே
சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு
மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 3
ஊழித்தீ யாய்நின்றாய்
உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய்
வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய்
படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க்
காளாய்நான் உய்ந்தேனே. 4
சடையானே சடையிடையே
தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப்
புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண்
டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 5
நீரானே தீயானே
நெதியானே கதியானே
ஊரானே உலகானே
உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ
பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 6
கண்ணானாய் மணியானாய்
கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய்
எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 7
மின்னானாய் உருமானாய்
வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய்
பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங்
காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 8
முத்திசையும் புனற்பொன்னி
மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப்
பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள்
எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 9
கருவரைசூழ் கடலிலங்கைக்
கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ்
செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார்
பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 10
- ஆத்ம ஞான மையம்