மன நிம்மதி பெற செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Padhigam for Peace of Mind

  Рет қаралды 146,660

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
சிவ புராணம் படிக்கும் முறையும் அதன் பலன்களும் | தினமும் சிவபுராணம் கேளுங்கள் | Siva Puranam
• சிவ புராணம் படிக்கும் ...
மன நிம்மதி பெற படிக்க வேண்டிய பதிகம்:
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

Пікірлер: 369
@AmrithaabiAmrithaabi
@AmrithaabiAmrithaabi 7 ай бұрын
நானும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தினமும் சென்று சிவபுராணம் படித்து வருகிறேன் ,என்னப்பன் என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்த்தியுள்ளார் ,மரணத்தை எதிர் நோக்கியிருந்த நான் என்னப்பன் ஈசன் அருளால் இன்று நிம்மதியாய் வாழ்கிறேன் .சர்வம் சிவார்ப்பணம்...
@poomariboobathi301
@poomariboobathi301 7 ай бұрын
அம்மா நான் ஒரு பள்ளி வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு நாள் என் வாழ்வில் ஒருநாள் பார்க்க கூடாத கஷ்டத்தை, பிரச்சனையை சந்தித்தேன் அம்மா😭வீட்டிலும் ஒரே பிரச்சனைதான் இந்த வயதில் பார்க்க கூடாத பிரச்சனை எல்லாம் பார்த்தேன்😭இதற்கு மேல் உயிர் வாழ வேண்டாம் என்று முடிவு எடுத்தோன் அம்மா😢பிறகு கை தவிர மொபைலில் யூடியூப் பக்கத்திற்கு சென்றது அம்மா "பிரச்சையில் இருந்து விடுபட திருப்புகழ் படியுங்கள் என்று உங்கள் பதிவு இருந்து அம்மா நான் அதை பார்த்தேன். கடைசி முறைதானா சும்மா படிப்போம் என்று திருப்புகழின் ஒரு பாடல் பாடினேன் பாடி 10 நிமிடம் கலந்து என் பிரச்சனை என்ன ஆனது என்றே தெரியவில்லை அம்மா அப்படியே காணமால் போனாது அம்மா நான் இன்று உயிரிருடன் இருப்பதற்கு உங்கள் குரல் மட்டுமே தாயே❤மிக்க நன்றி
@allit4309
@allit4309 7 ай бұрын
நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம்❤🙏 தாங்கள் சொல்ல சொல்ல அடியேனுக்கு மெய் சிலிர்க்குதம்மா. Love you sooo much amma❤❤❤❤❤🙏🙏🙏
@PradheephaPradheepha
@PradheephaPradheepha 7 ай бұрын
வணக்கம் அம்மா நீங்க சொல்லும் அனைத்தும் உண்மைதான் அம்மா. நான் தினமும் சிவபுராணம் பாராயணம் செய்கிறேன். மனம் நிம்மதியாக இருக்கிறது. எந்த கஷ்டம் வந்தாலும் மனதுக்கு அமைதியைத் தருகிறது. அனைவரும் இதைப் பாராயணம் செய்து நலன் பெற வேண்டுகிறேன். நன்றி அம்மா.
@MurugesanMurugesan-ny1lu
@MurugesanMurugesan-ny1lu 7 ай бұрын
❤❤❤bharathanaidu❤😢❤❤
@poornimam4375
@poornimam4375 7 ай бұрын
எப்பொழுது படிக்க வேண்டும்
@PradheephaPradheepha
@PradheephaPradheepha 7 ай бұрын
பூஜை அறையில் விளக்கு ஏற்றி படிப்பது மிக விஷேஷம். முடியவில்லையெனில் எப்பொழுதும் எங்கேயும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பராயணம் செய்யலாம். முயற்சி செய்து பாருங்கள் சகோதரி.
@poornimam4375
@poornimam4375 7 ай бұрын
@@PradheephaPradheepha நன்றி சகோதரி 🙏🙏🙏
@MahaLakshmi-qp2in
@MahaLakshmi-qp2in 7 ай бұрын
❤,ஃ
@lakshmanans1681
@lakshmanans1681 7 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@Eshwari2
@Eshwari2 7 ай бұрын
திருவாசகத்திற்கு உருகதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 🙏🙏 ஓம் நம சிவாய🙏🙏
@adminloto7162
@adminloto7162 7 ай бұрын
எல்லாம் கொடுத்த சிவபெருமானே எல்லோருக்கும் சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்து அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 7 ай бұрын
அம்மா அடியேன் தினமும் காலை, மாலை இரு வேளையும் பாராயணம் செய்கிறேன் அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 7 ай бұрын
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானால் தினமும் சிவன் கோவிலுக்கு செல்கிறேன் அம்மா ❤ அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது ஓம்நமசிவாய வாழ்க ❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 7 ай бұрын
அம்மா திருவாசகம் என் உயிர் முச்சு அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமசிவாய வாழ்க❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@velmanip5130
@velmanip5130 7 ай бұрын
அம்மா வணக்கும் நான் முதல் நபராக like இருக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை உங்கள் சொற்பொழிவு மனத்திற்கு திருப்தி
@CPSamy-bl5pb
@CPSamy-bl5pb 2 ай бұрын
சகோதரி உங்களுடைய சொற்பொழிவுகள் கேட்டாலே மன நிம்மதி கிடைக்கிறது நீங்கள் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@adavan4378
@adavan4378 7 ай бұрын
உண்மையில் நான் தீராத மன அழுத்தம் குழப்பம் சொல்ல முடியாத பிரச்சினைகளின் உச்சியில் இருந்தேன் சாகவும் முடியாது வாழவும் முடியாது என் அப்பன் சிவனிடம் வேண்டி கொண்டு வெள்ளி இரவு உறங்க சென்றேன் சிவனே உங்கள் மூலம் எனக்கு வழி காட்டிவிட்டார் நன்றி சகோதரி 😢😢😢😢😢😢
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 7 ай бұрын
அம்மா நான் நேற்று.😊 சங்கரா டிவியில் உங்களுடைய சொற்பொழிவை. பார்த்தேன் அருமையாக உள்ளது. இன்றைய பதிவு கூட அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@ravikumar.m7998
@ravikumar.m7998 7 ай бұрын
Please..Timing Sollunga Mam
@jeyalavan8135
@jeyalavan8135 7 ай бұрын
இவ்வளவு நன்மை உள்ளது அறியாமலே பாடசாலைக்காலம் முதல் வெள்ளி தோறும் படிக்கும் சிவபுராணத்தின் பெருமை அறிந்தேன் சகோதரி❤நன்றாக இருக்கணும் நீங்களும்
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 7 ай бұрын
அம்மா உங்கள் குரலில் சிவபுராணம் தினமும் கேட்பேன் அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@paramagurus1811
@paramagurus1811 7 ай бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 ண
@tamilselvim2069
@tamilselvim2069 7 ай бұрын
நன்றி அம்மா.மதிய வணக்கம் அம்மா
@smartpravin9736
@smartpravin9736 7 ай бұрын
Hii Amma unga சொற்பொழிவு ரொம்ப நல்லா இருக்கு அம்மா 😊
@Kajenthiran.
@Kajenthiran. 7 ай бұрын
அம்மா நன்றி ❤காலை வணக்கம்❤
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 7 ай бұрын
From I was 18 years old I am studying Siva puranam its true now I am sixty 👍🙏🙏
@GowTham-uc9er
@GowTham-uc9er 7 ай бұрын
I'm studying shiv puranam 19 year old
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@suganyas7611
@suganyas7611 7 ай бұрын
வணக்கம் அம்மா, நான் சிவபுராணம் நினைக்கும் போதெல்லாம் பாடும் போதும் கண்ணீர் தாரை தாரையாக வரும். ஒவ்வொரு முறையும் அழுகை வரும். என் அம்மயப்பனை நினைத்த நேரத்தில் மனம் அமைதி பெறும். நானே சாட்சி❤
@manosaravanan1799
@manosaravanan1799 7 ай бұрын
அருமை அருமை அருமை அம்மா நான் தினமும் சிவபுராணம் சொல்வேன் உண்மையில் மிக அருமையான மன அமைதி கிடைக்கிறது அம்மா ❤நீங்கள் எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤
@annamayilganesh2919
@annamayilganesh2919 7 ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 சிவபுராணம் படித்தல் மனதில் ஒரு மகிழ்ச்சி யாக இருக்கும் உன்மை சகோதரி 🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 7 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா அனைவரும் சிவபுராணம் பாராயணம் பண்ணுங்க வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@SruthiVinoth
@SruthiVinoth 7 ай бұрын
Intha second enakku theva patta pathivi mam😢
@nathundhukin8153
@nathundhukin8153 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏
@hemalathavijayakumar9065
@hemalathavijayakumar9065 7 ай бұрын
அம்மா நீங்கள் சொல்லி அறிவுரையை கேட்ட பின்பு தான் என்னால் சிவபுராணம் முழுமையாக பார்க்காமல் சொல்ல முடிந்தது தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
@sathyamurthy5604
@sathyamurthy5604 7 ай бұрын
நன்றி அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@devikanda886
@devikanda886 7 ай бұрын
அம்மா உங்கள் பதிவு தான் எனக்கு மன நிம்மதியை தந்தது. மிகவும் நன்றி அம்மா.
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 7 ай бұрын
நான் தினமும் காலை மாலை படிக்கிறேன் அம்மா🙏🙏🙏 💐
@periasamys8260
@periasamys8260 7 ай бұрын
Om namahshivaya shivayanamah om 🌺🌺🌺🌺🌺
@karpagaselvi3963
@karpagaselvi3963 7 ай бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@sujasubha4528
@sujasubha4528 7 ай бұрын
நாங்கள் மனநிம்மதியாக வாழ வழிவருக்கும் என் தாய்க்கு மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻
@bharathiraghavi
@bharathiraghavi 7 ай бұрын
உங்கள் குரலில் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது
@annampoorani7019
@annampoorani7019 7 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏
@thamotharan2946
@thamotharan2946 7 ай бұрын
Mikka nandrigal Amma.Om Namashivaya 🙏
@SubramanianVelmurugan-c8j
@SubramanianVelmurugan-c8j 6 ай бұрын
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.எங்கே மனிதன் வாழவில்லையோ....._ அங்கேதான் நிம்மதி. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி .
@FffTtf-jg7zz
@FffTtf-jg7zz 7 ай бұрын
Kaalai vanakkam. Amma🎉🎉🎉
@playerone8021
@playerone8021 7 ай бұрын
தங்களின் கருத்து இறைவனின் கருத்து.
@sheiladevi8080
@sheiladevi8080 7 ай бұрын
Om Namashivaya Thank You Amma
@Sakthikarunyas
@Sakthikarunyas 7 ай бұрын
தெளிவான தகவலுக்கு நன்றி. .
@rajeshrajalakshmi5965
@rajeshrajalakshmi5965 7 ай бұрын
Good morning to all happy rathasabthami on aadhithaya namaha🙏🙏
@nishakumar7161
@nishakumar7161 7 ай бұрын
Thanks amma
@srikanthl2859
@srikanthl2859 7 ай бұрын
என்னால் முடிந்தவரை பிரதோஷம் அன்று சிவபுராணம் படிப்பேன் அக்கா.
@RadhaRajesh-zp6yl
@RadhaRajesh-zp6yl 7 ай бұрын
Super amma🙏🙏🙏🙏
@parvathyswaminathan5566
@parvathyswaminathan5566 7 ай бұрын
திருவாசகம் படிக்க படிக்க ஆனந்தம் ...
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின்பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயனுள்ள தகவல் அம்மா! மிகவும் நண்றி அம்மா 🌹🌹🌹🙏சிவபராணம் தங்களின் தமிழ் உச்சரிப்பால் மேலும்சிறப்பு பெற்றது ! அம்மா தங்கள் திருப்பாதங்கள் சரணம். அம்மா !🌹🌹🌹🙏
@praveenramu1767
@praveenramu1767 7 ай бұрын
Unmaithaan amma payan ulla thagaval amma 🙏 naan ungal maanavi amma 🙏
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 5 ай бұрын
குருவால் வருவாய் அருள்வாய் குருமாதா
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 7 ай бұрын
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைபொழுதும் என்நெஞ்சில் நீங்காதாள் வாழ்க. ஓம் நமசிவாய 🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏 சிவபுராணம் அடிகடி கேட்பேன் படிச்சி பார்ப்பேன் அருமையான பாடல் படிக்க ரொம்ப ஈசியாக இருக்கும் மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 7 ай бұрын
Kalai vanakkam amma
@divyadivya908
@divyadivya908 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏 சித்தர்களின் வரலாறுகளைப் பற்றி பதிவுகள் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@murugavel5678
@murugavel5678 7 ай бұрын
அனைவருக்கும் நல்லதே நடக்கவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏
@suriyapraba706
@suriyapraba706 7 ай бұрын
மகளே எனக்கு வயது 71 ஆகிறது.சிவ புராணம் தினமும் சொல்லி வருகிறேன்.ஆனால் அர்த்தம் ஒவ்வொரு வரிக்கும் தெரியவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.என் விருப்பத்தை உங்களால நிறைவேற்ற முடியுமா மகளே.ஏன் என்றால் விளக்குரை புத்தகங்களை படிக்கும் போது கண் ரொம்ப வலிக்கிறது. அம்மா
@tamiltamil8041
@tamiltamil8041 7 ай бұрын
KZbinlaye check panuga
@heidii16
@heidii16 7 ай бұрын
Yes already Sollirikanga
@jb19679
@jb19679 7 ай бұрын
அருமையான பாடல் அற்புதமான விளக்கம் சிவபுராணம் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 7 ай бұрын
அம்மா மிக்க நன்றி🙏🙏
@deepasairam2609
@deepasairam2609 7 ай бұрын
Akka arumai Om namah shivaya
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 7 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@aadhavv
@aadhavv 7 ай бұрын
அம்மா நீங்கள் கொடுத்த இந்த பதிவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏. எங்களுக்கு கடவுளே வந்து எங்கள் மனக்குறை நீங்க வழி சொன்னது போல இருந்தது. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@nithishatamilchannel2010
@nithishatamilchannel2010 7 ай бұрын
Romba nanri amma. Life veruthupoi iruken amma. Ungal sorpozhuvu keten romba mana aruthala iruku😢
@krishnandhu7242
@krishnandhu7242 7 ай бұрын
மிகவும் எதிர்பார்த்த ஒரு பதிவு.. மிக்க நன்றி அம்மா...🙏
@nvenkateshvenkatesh5348
@nvenkateshvenkatesh5348 6 ай бұрын
THANKS FOR YOUR GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
@komathymurugason3854
@komathymurugason3854 7 ай бұрын
Marvellous!!correct sis.Sivapuranam was first thing I sang.I don't know any tiruvasagam when I newly went to work 29 years ago and when I heard sivapuranam for first time it attracted me don't why and I started to sing and till know I keep chanting it and my life had changed drastically. Lord Shiva is really great and you can feel it when you really felt love with him.om namahshivaye
@kalaiparthiban5041
@kalaiparthiban5041 7 ай бұрын
Nandri Amma
@SabithaKumar-qp3uz
@SabithaKumar-qp3uz 2 ай бұрын
நன்றி அம்மா
@rathinamm339
@rathinamm339 7 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@dhaneeshmac3564
@dhaneeshmac3564 7 ай бұрын
ஓம் சிவாயநம🙏
@pothumani1071
@pothumani1071 7 ай бұрын
ஓம் சிவ சக்தி
@nagalakshmi3437
@nagalakshmi3437 7 ай бұрын
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
@SalaKarthikeyan
@SalaKarthikeyan 6 ай бұрын
அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karuppasamyg6885
@karuppasamyg6885 7 ай бұрын
வணக்கம் மிகவும் நன்றி சகோதரி ஜான்சிராணி ❤
@rekhaGood-w7i
@rekhaGood-w7i 6 ай бұрын
Vanakkam Amma Megam arumai Aana padivu
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 7 ай бұрын
Thank you mam right now I need this omg suffering from so much stress can't even sleep in nights..yes 🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 7 ай бұрын
DRamani voice la sivapuranam is a divinie n bliss❤
@GopikaT-c1y
@GopikaT-c1y 7 ай бұрын
Yesterday Ungalai neril parthathu mikavum Santhosham....❤
@Sahana-by5jk
@Sahana-by5jk 7 ай бұрын
அம்மா 🙏. கருப்பசாமி, சீலைக்காரி அம்மன் பற்றி பதிவு தாருங்கள்.
@sivamanim.g2201
@sivamanim.g2201 7 ай бұрын
OM NAMAHSIVAYA 🕉
@saradhav4529
@saradhav4529 4 ай бұрын
Really true sister naan 2months sivan puranam daily one times keetan...
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 7 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு நன்றி
@vaishallipm497
@vaishallipm497 7 ай бұрын
Yes amma pls explain siva puranam🙏
@VeeraKanna-m1o
@VeeraKanna-m1o 7 ай бұрын
சிவபுராணம் மனநிறைவு வாழ்க வளமுடன்
@keerthigaarun8926
@keerthigaarun8926 7 ай бұрын
Intha pathivi ku romba nanthri.thank you so much amma
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 🙏
@AmbikaKanishka-p5x
@AmbikaKanishka-p5x 7 ай бұрын
அம்மா நன்றிங்க ❤❤❤🎉🎉
@SaravananSaravanan-fq5jc
@SaravananSaravanan-fq5jc 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் 🙏
@pothumani1071
@pothumani1071 7 ай бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@shobanashobana3431
@shobanashobana3431 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@SARATHAPRIYAG-vs4so
@SARATHAPRIYAG-vs4so 7 ай бұрын
Enga schoolah friday sivapuraanam padikirathu than prayer.. naan and innum 4 per senthu solluvom schoolah elarum repeat pannuvanga.. apola paatoda arumai theriyathu..ipo feel proud😊
@sridharsenthil9230
@sridharsenthil9230 7 ай бұрын
சகோதரி மீண்டும் திருவாசகம் வகுப்பு எடுங்கள் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 7 ай бұрын
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@umaswetha7589
@umaswetha7589 4 ай бұрын
அம்மா பாதிவு பார்த்து கொல்கிறேன்
@devikanda886
@devikanda886 7 ай бұрын
Very very thank you amma.
@suganthi.s9667
@suganthi.s9667 7 ай бұрын
Thank you sister. Thank you shivaya
@Mani-u1y
@Mani-u1y 7 ай бұрын
நன்றி அம்மா ஓம் நமசிவாய
@shanthisundhar4595
@shanthisundhar4595 7 ай бұрын
அம்மா கந்தபுராணம் நீங்கள் சொல்லுங்கள் அம்மா நன்றி அம்மா
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 7 ай бұрын
ஓம் நமசிவாய காலைவனக்கம் குருமாதா
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 7 ай бұрын
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@munirajn8806
@munirajn8806 7 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 8 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН