Рет қаралды 21,633
பாரம்பரியம் நிறைந்த ஒரு மொறு மொறு சிற்றுண்டி தட்டை வடை ஆகும்.இதை செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் விரும்பிய நேரத்தில் எடுத்து சாப்பிடலாம்.மாலை நேரம் தேநீர் குடிக்கும்போது இரண்டு வடையை எடுத்து கடித்தும் பாருங்கள். ஆகா என்ன ருசி!
மைதாமாவில் ஊறவைத்த உளுந்து,செத்தல் தூள்,உப்பு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து பின் சூடு செய்த எண்ணெயில் ஒரு 3-4 மேசைக்கரண்டி எண்ணெயை இந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கையில் ஒட்டாதவாறு குழைத்து எடுக்கவும்.பின் சப்பாத்தி பலகையில் வைத்து மெல்லியதாக தட்டி வட்டமாக கப்பால் வெட்டி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள்
1. உளுந்து / black gram - 1 cup
2. வெள்ளைமா / all purpose flour - 2 cup
3. செத்தல் தூள் / chilli flakes - 50 g
4. மரக்கறி எண்ணெய் / vegetable oil - 500 ml
5.கறிவேப்பிலை / curry leaves
6. உப்புத்தூள் / table salt - 1 tbs
7. பெருஞ்சீரகம் / fennel seeds - 2 tbs