Рет қаралды 92
#dailytamilbibleverse #vaarthaitv #vaarthai #tamilbibleverse #tamilbible #dailytamilbible #tamilgospelmessage
Follow Us On Facebook: / vaarthaitv
Follow Us On Instagram: / vaarthaitv
Follow Us On Sharechat: sharechat.com/...
நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
யாத்திராகமம் 14:16
எந்த பிரச்சினையான சூழ்நிலையிலும் கர்த்தருடைய சத்தத்தை கேட்க தவறாதீர்கள். பரிசுத்த வேதாகமம் தேவனுடைய பொதுவான சித்தத்தை கூறுகிறது. நீங்கள் வெற்றி, செல்வம், ஆரோக்கியம் இவை அனைத்தையும் பெற வேண்டும் என்பது தேவனுடைய பொதுவான சித்தம். இது வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றை எவ்வாறு பெறுவது என்பதை குறித்து ஆண்டவர் தனிப்பட்ட முறையில் உங்களோடு பேசுவார். ஆண்டவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்த தவறாதீர்கள். பலர் நான் ஆண்டவருடைய சத்தத்தை கேட்டதே இல்லை என்கின்றனர். ஆடுகள் மேய்பனுடைய சட்டத்தை அறியும் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் ஆடு, இயேசு கிறிஸ்து மேய்ப்பன். எனவே அவருடைய சத்தத்தை நீங்கள் அறிய முடியும். ஆடுகள் எப்படி மேய்பனுடைய சத்தத்தை அறிந்து கொள்கின்றன? அவை மேய்ப்பனுடைய சத்தத்தை கேட்டு கேட்டு பழகினதினால் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அறிக்கை :
நான் ஆடு, இயேசு என் மேய்பர். நான் அவருடைய சத்தத்தை அறிந்திருப்பதால் அவருடைய சத்தத்தை கேட்டு அதை விசுவாசித்து நடப்பேன். ஆமென்