Рет қаралды 1,152,898
இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த கருத்தாங்கிய அன்னையே
தூய தோமா மலை மீது
அமர்ந்தாளும் மலை மாதாவே....
கருணைக் கண் சுடரே அம்மா...
தாய்மை பேறின் அருளூற்றே..
எம் ஆதரவே வாழ்க வாழ்க.....
கருத்தாங்கும் திருத்தாயே தயை வேண்டினேன்
கருணைக் கண் சுடரே உம் வரம் தாருமே
இறை இயேசுவை நீர் எதிர் நோக்கியே
மலை மீது அமர்ந்தாளும் மலை மாதாவே
ஏங்கிடும் உள்ளங்கள் மீட்படைய
இயேசுவைக் கருவாக சுமந்தவரே
உம் பாதம் நாடுவோர் உள்ளம் நிறைவாகுமே
தோமாவின் புகழாரம் நீர் தானம்மா
கரம் குவித்து வேண்டுகிறேன் அம்மா எம் கரம் குவித்து வேண்டுகிறேன் அம்மா
திருவுளம் தாங்கிடும் கருவளமே
தீராத சுமை நீக்கும் சுகவரமே
பழிகள் தாங்கியே தவித்திடும் மாதர்க்கு
தாய்மை எனும் பேறினைப் பொழிவாயம்மா
தயவின்றி வாழ்வில்லை அம்மா
உம் தயவின்றி வாழ்வில்லை அம்மா
இறைவனின் வார்த்தையில் சரணானீர்
இடர் நீக்கும் அருளாய் என் துணையானீர்
திருமலை மீதிலே திகழ்ந்திடும் தீபமே
திருமலை மீதிலே திகழ்ந்திடும் தீபமே
கைவிடாதத் தாயுள்ளம் நீர்தானம்மா
தஞ்சமதை நாடுகிறேன் அம்மா
என் தஞ்சமதை நாடுகிறேன் அம்மா
Singer : Kalpana
Producer : Most.Rev.Fr.G.Backiya Regis
Lyrics & Music : Raja Isai Bharathi
Orchestration : Anandha Geethan
Tabla : Venkat
Flute : Nathan
Sitar : Robert
Shooting Spot : St.Thomas National Shrine,St.Thomas Mount,Chennai
Camera : Mr.Basilica,Sindhu Studio,Chennai.
Our Sicere Thanks to the Rector Fr.Arul Raj
Organized By Mr.Lourdu Samy