Рет қаралды 205,678
பாதுஷா செய்ய தேவையான பொருள்கள்
மைதா மாவு ஒரு கிலோ
டால்டா சரியான அளவு 500 கிராம்
சர்க்கரை ஒரு கிலோ
ஆப்ப சோடா சிறிதளவு
சால்ட் சிறிதளவு
ஆயில் பொரிக்க தேவையான அளவு
வாழை இலை 2
தேவை என்றால்
தேங்காய்ப்பூ அல்லது திராட்சை அல்லது முந்திரிப்பருப்பு அல்லது பாதாம் பருப்பு
வெண்ணிலா எசன்ஸ் தேவை என்றால் அல்லது நெய் சிறிதளவு வாசனைக்காக
செய்முறை விளக்கம்
முதலில் டால்டா சிறிதளவு ஆப்ப சோடா 2 பிடி சர்க்கரை சேர்த்து சிறிதளவு உப்பு நன்றாக டால்டாவை பீட் பண்ண வேண்டும் நன்றாக பீட் பண்ணும் பொழுது சர்க்கரை கரையாது
அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக டால்டாவை வெண்ணை போல் ஆகவேண்டும் மறுபடியும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வெண்ணெய் போல் ஆக்க வேண்டும் அதில் ஒரு கிலோ மைதா மாவை சேர்த்து பிசைய வேண்டும் பிசையும் பொழுது மாவு புட்டு மாவு போல் வரும் அப்பொழுது சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசய வேண்டும் சப்பாத்தி மாவு போல் இருக்கக்கூடாது ஆகவே தண்ணீர் தெளித்து பிசைந்த மாவு நீட்டு வாக்கில் உருட்டும் பொழுது மாவு கிள்ளுவது போல் வர வேண்டும் பிறகு அதை நன்றாக உருட்ட வேண்டும் உருட்டி கையில் ஓரத்தில் சிறிது அழுத்தவேண்டும் பிறகு ஆயில் சூடாக வேண்டும் ஆயிலின் சூடு உதாரணமாக ஒரு சிறிய பீஸ் போட்டாஸ் வெகு நேரம் ஆகி மேலே வரவேண்டும் அவ்வாறு சூடு பதத்தில் தான் இருக்க வேண்டும் பாதுஷாவை போடும் பொழுது கண்டிப்பாக அடுப்பு off நிலையில் இருக்க வேண்டும் பாதுஷா போட்டபிறகு உதாரணமாக பத்து பீஸ் போடுகிறீர்கள் என்றால் பத்தாவது பீஸ் போடும்பொழுது முதல் பீஸ் மேலே வரவேண்டும் ஆயில் இன் சூடு அவ்வாறுதான் இருக்க வேண்டும் இவ்வாறு செய்யும்பொழுது அனைத்து பாதுஷா களும் மேலே வந்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பை ஆன் செய்ய வேண்டும் சிறிது ஃபயர் வைக்க வேண்டும் பாதுஷாவை திருப்பி திருப்பி பொரிக்க வேண்டும் பொரிக்கும் பொழுது பாதுஷா பிஸ்கட் கலரில் வரவேண்டும் அவ்வாறு பொரித்த பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு எடுக்க வேண்டும் காரணம் அடுத்த 10 பீஸ் போடும்பொழுது சூடு சரியான பதத்தில் இருக்கும் இவ்வாறாக அனைத்தும் பொரித்த பிறகு சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு போட்டு தண்ணீர் சக்கரை க்குமேல் இருக்குமாறு ஊற்ற வேண்டும் ஊற்றிய பிறகு சர்க்கரை நன்றாகக் கொதிக்க வேண்டும் சர்க்கரையின் பதம் கரண்டியில் இருந்து சொட்டும் பொழுது சிறிது நின்று சொட்ட வேண்டும் கம்பி பதம் வரக்கூடாது சர்க்கரையை ஆப் செய்துவிட்டு சர்க்கரையை சாதக் கரண்டி கொண்டு நன்றாக சர்க்கரையை கரைக்க வேண்டும் அவ்வாறு கரைக்கும் பொழுது சர்க்கரை மாவு பதத்துக்கு வரும் சர்க்கரையின் மேல் சிறிது வெள்ளை கலர் வர ஆரம்பிக்கும் பொழுது இரண்டு ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும் தண்ணீர் தெளிக்கும் பொழுது சர்க்கரையிலிருந்து புகை வராமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சர்க்கரை சூடுதணிந்து மாவு பதத்தில் இருக்கிறது என்று அர்த்தம் பிறகு உங்களுடைய தேவைக்கு ஏற்ப வெண்ணிலா எசன்ஸ் அல்லது நெய் சிறிது ஊற்றி சர்க்கரையை களறி அதன்மீது பாதுஷா களை முழுக வைக்க வேண்டும் முழுகிய பிறகு பாதுஷாவை எடுத்து கரண்டியில் வழித்து விட்டு வாழை இலை மீது வைக்க வேண்டும் வைக்கும் பொழுது உங்களுடைய தேவைக்கு ஏற்ப தேங்காய் பூ அல்லது முந்திரி அல்லது பாதாம் இவைகளில் ஒன்றை அதன்மீது வைக்க வேண்டும் வைத்த சிறிது நேரத்தில் பாதுஷா காய்ந்துவிடும் காய்ந்த பிறகு பாதுஷாவை இலையில் இருந்து எடுக்கவேண்டும் எடுக்கும்பொழுது பாதுஷாவின் கீழ்பகுதியில் சர்க்கரை காய்ந்த நிலையில் இருந்தால் எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடுக்க வேண்டாம் சுவையான பாதுஷா ரெடி
#chefmadrasmurali /#Deeppavalisweet /#Bhadusharecipeintamil
play.google.com/store/apps/de...
/ chefmurali73
/ muralidharansugandhi.c.7
sreebalaacatering.com
/ chefmadrasmurali