No video

ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் ( திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் ) Thirukarukavoor

  Рет қаралды 601

TamilRB0to9

TamilRB0to9

Күн бұрын

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் அருள்பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகை, திருமணம் ஆகாத பெண்களுக்கு, குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாய் கர்ப்பரட்சாம்பிகை விளங்குகிறது.
இந்த திருக்கருகாவூர் கோவிலின்(முல்லைவன நாதர் கோயில் திருக்கருகாவூர்) கிழக்கு பகுதியில் ராஜகோபுரம், தெற்கு பகுதியில் கோவிலின் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கும். கோவிலின் உள்ளே நுழைந்த உடன் தென்புறம், மற்றும் பின்புறம் நந்தவனமும், வடக்கு பகுதியில் வசந்த மண்டபமும் இருக்கிறது.
அந்த திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்(Thirukarugavur) முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவை காட்சி அளிக்கின்றன. முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் இரண்டு பேர் வாழ்ந்து வந்தனர். நித்துருவர், வேதிகை என்ற இரு தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும், அம்மனையும் கும்பிட்டு வந்தனர்.
இதனை அடுத்து வேதிகை கருவுற்றாள், ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை மிகவும் கர்ப்பத்தில் அவதிப்பட்டாள். அந்த நிலையில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். வேதிகை மயக்க நிலையில் இருந்ததால் பிச்சை கேட்டு வந்தவருக்கு உணவு கொடுக்க இயலவில்லை.
அவள் அவதி நிலையில் இருப்பதை அறியாத இந்த முனிவர் கோபம் கொண்டு சாபமிட்டார். சாபத்தால் கருவில் உள்ள குழந்தை கலைந்தது. வேதிகை மனமுருகி வழிபட, அம்மன் நேரில் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரை காப்பாற்றி கொடுத்தாள்.
இந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி கர்ப்பிணி பெண்களை காக்கும்படி வேதிகை வேண்டினாள். இதனடிப்படையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு
கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைய்த்த நிலையில் காட்சி தருகின்றாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
குழந்தை இல்லாதவர்கள் அம்மன் பாதத்தில் மந்திரித்து வைத்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு வாய்க்கப்பெறும்.
திருமணம் ஆன தம்பதிகளுக்கு எவ்ளோ செல்வம் வந்து போனாலும் குழந்தை இல்லையென்றால் வெறும் வாழ்க்கையாய் போய்விடும். இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.
இந்த திருக்கோவிலுக்கு குழந்தை பேரு வேண்டியும், சுகப்பிரசவம் ஆக தமிழகத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் வருகிறார்கள். திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் நேரடியாகவே கோவிலுக்கு வந்து நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.
TamilRB0to9
Thank you universe 🙏

Пікірлер: 1
@manikandanpadmanaban6132
@manikandanpadmanaban6132 Ай бұрын
🙏🙏🙏🙏
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 11 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Meenkulathi Bhagavathi Temple palakkad
5:27
Digital Mani
Рет қаралды 8 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 11 МЛН