Рет қаралды 40,658
Abirami Anthathi - Uyar Pathavigal Kidaika Abirami Anthathi - Abirami Anthathi Meaning in Tamil - Abirami Anthathi Lyrics in Tamil - Abirami Anthathi Miracles - Abirami Anthathi Benefits
For Aalayam Selveer Products visit our New Website www.aalayamselveer.com
"புதுப்பொலிவுடன் புதிய இணயதளம்" இன்று முதல்!!! புது இணயதள அறிமுக சலுகையாக எந்த பொருட்கள் வாங்கினாலும் 85 மதிப்புள்ள ஒரு சித்தர்கள் மூலிகை கப் சாம்பிராணி பாக்ஸ் (12 கப்புகள் கொண்டது) முற்றிலும் இலவசம்!!! உங்கள் ஆதரவு இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. தரமான உள்நாட்டு மூலிகை தயாரிப்பு பொருட்களை வாங்கி ஆதரவு தாருங்கள். 🙏🙏
New Look Website launch offer!! With all purchases - Free!! - Siddhar Herbal Cup Sambrani - 1 Box(12 Cups), worth ₹ 85. Offer Valid Till Stock Lasts!!!
அபிராமி அந்தாதி பாராயணம்:
அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்:
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
Aaththaalai engal abiraamavalliyai, andam ellaam
pooththaalai maadhulam poo niraththaalai puvi adangak
kaaththaalai angusa paasangusamum karumbum angai
serththaalai mukkanniyai thozhuvaarkku oru theengum illaiye.
மனஅமைதி பெற - அபிராமி அந்தாதி 58 வது பாடல்
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்,
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.
Arunaambuyaththum, en siththaambuyaththum amarndhirukkum
tharunaambuyamulaith thaiyal nallaal, thagai ser nayanak
karunaambuyamum, vadhanaambuyamum, karaambuyamum,
saranaambuyamum, allaal kandilen, oru thanjamume.
அபிராமி அந்தாதி பாடல் பொருள் :
காலையில் மலரும் இளஞ்சிவப்பு நிற தாமரையிலும், என் மனத்தாமரையிலும் வீற்றிருப்பவள் அன்னை அபிராமி. தாமரை அரும்பைப் போன்ற தனபாரத்தையுடைய அம்பிகை என்றும் இளம் பெண்ணாக காட்சி தருபவள் . அவள் மிகவும் நல்லவள். அன்னையின் பெருமை வாய்ந்த, கருணை ததும்பும் கண்களாகிய தாமரைகள், முகமாகிய தாமரை, கரங்களாகிய தாமரைகள், திருவடிகளான தாமரைகள் இவற்றை தவிர வேறொரு தஞ்சம் எனக்கில்லை
தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து விட்டு நம் பணிகளை தொடங்கும் முன்னர் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த காரிய சித்தி பாடலை 3 முறை ஓதினால், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மனம் அமைதி பெற்று தெளிவான சிந்தனை பிறக்கும். இதனால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலனை கொடுக்கும். யாருடைய உதவியும் இல்லாமல் உங்களால் சுயமாக, தீர்க்கமாக முடிவு எடுக்க முடியும். மனதில் சாந்தம் குடிகொள்ளும். அன்பர்கள் அனைவரும் இப்பாடலை தினமும் பாடி கட்டாயம் பயன் பெறலாம்.
For Aalayam Selveer Products visit our New Website www.aalayamselveer.com
"புதுப்பொலிவுடன் புதிய இணயதளம்" இன்று முதல்!!! புது இணயதள அறிமுக சலுகையாக எந்த பொருட்கள் வாங்கினாலும் 85 மதிப்புள்ள ஒரு சித்தர்கள் மூலிகை கப் சாம்பிராணி பாக்ஸ் (12 கப்புகள் கொண்டது) முற்றிலும் இலவசம்!!! உங்கள் ஆதரவு இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. தரமான உள்நாட்டு மூலிகை தயாரிப்பு பொருட்களை வாங்கி ஆதரவு தாருங்கள். 🙏🙏
New Look Website launch offer!! With all purchases - Free!! - Siddhar Herbal Cup Sambrani - 1 Box(12 Cups), worth ₹ 85. Offer Valid Till Stock Lasts!!!
#aalayamselveer #abiramianthathi