Рет қаралды 7,976
#temples #iraivazhithedi #alayam #alayangal
#kumbakonam #shivatemples
தேவார பாடல் பெற்ற தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
இறைவன் அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி தாயார் பவழக்கொடி அம்மை, (பிரபாளவல்லி)
சுக்ரீவன் வழிபட்ட தலம்
ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 31ஆவது சிவத்தலமாகும். பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.
தென் குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் இத்தலம் உள்ளது.
அடித்து துரத்தப்பட்ட சுக்ரீவன் எங்கெங்கோ சுற்றினான். இறுதியில் இந்தத் தென்குரங்காடுதுறை தலத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரரை வணங்கினான். இந்த ஈஸ்வரனின் அருள் பெற்றான். பின் ராமபிரானின் அன்பைப் பெற்று அவரது துணையுடன் எதிர்காலத்தில் கிஷ்கிந்தையின் அரசனானான். இழந்த சுகபோகங்களை மீட்டுத்தர இந்த ஈஸ்வரரை வணங்கினால் அருள் புரிவார். அனைத்தையும் பெற்றுத்தருவார். ஸ்வாமியின் கருவறை அகழி அமைப்பை உடையது. வானரப்படையைச் சேர்ந்த சுக்ரீவனால் பூசிக்கப்பட்ட ஈஸ்வரன் என்பதால் இத்தலம் தென்குரங்காடுதுறை என அழைக்கப்படுகிறது. இங்கு சுக்கிரீவனுக்குத் தனி சந்நிதி இருக்கிறது.
எப்படி செல்வது?
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் ஆடுதுறை பேருந்து நிறுத்தம் இறங்கி அங்கிருந்து குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் ஆலயம் உள்ளது.
புகைவண்டி நிலையம் : ஆடுதுறை
அருகில் உள்ள விமான நிலையம் : திருச்சி
அன்னையின் செல்வர்கள் வழிபாட்டுக்குழு:
திரு . சொக்கலிங்கம் அய்யா : 99940 89360
___________________
______________
மேலும் இதுபோன்ற பல தகவல்களுக்கு காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்.
For more, support and subscribe our KZbin channel "SS IRAIVAZHI THEDI"
/ @ssiraivazhithedal